ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி: பிரதமர் மோடி!
Jun 14, 2026, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 24, 2023, 07:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நடந்த தசரா விழாவில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “இண்டி” ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு குறித்து விமர்சித்தபோது, ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி நடக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

தலைநகர் டெல்லியில் துவாரகா செக்டார் 10-ல் உள்ள ராம் லீலா மைதானத்தில் விஜய தசமி மற்றும் தசரா விழா நடைபெற்றது. ஸ்ரீராம் லீலா சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில், தலைமை விருந்தினராக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது, நீல நிறத்தில் கட்டம் போட்ட காவிக்கலர் சட்டை அணிந்திருந்தார். அதேபோல, காவி நிற தலைப்பாகை அணிந்திருந்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க. தலைவர் பர்வேஷ் வர்மா கூறுகையில், “பிரதமர் மோடி இவ்விழாவுக்கு வருகை தந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கெனவே, கடந்த 2019-ம் ஆண்டு நடந்த விழாவில் பங்கேற்றார். இந்த முறையும் எங்களின் அழைப்பை ஏற்று வந்திருக்கும் பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். விழாவில், ராவணனின் உருவ பொம்மையையும் பிரதமர் எரிப்பார்” என்றார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நவராத்திரி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு உங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தீமைக்கு எதிரான நன்மையின் அடையாளமாக இப்பண்டிகை திகழ்கிறது. விஜயதசமி நாளான இன்று நம் நாட்டில் ஆயுதங்களை வைத்து பூஜை செய்து வணங்குவது எந்த நிலத்தையும் ஆள்வதற்கு அல்ல, நமது சொந்த நிலத்தை காக்கவே. இது ஒரு சாஸ்திர பூஜை.

நிலவில் கால்பதித்து 2 மாதங்களான நிலையில், அதனுடன் இன்று நாம் விஜயதசமியை கொண்டாடுகிறோம். கீதையின் அறிவையும் நாம் அறிவோம். அதேசமயம், ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் தேஜாஸ் ஆகியவற்றை உருவாக்கும் திறனும் நம்மிடம் இருக்கிறது. இன்றைய தினம் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்படுவதைக் காணும் அதிர்ஷ்டசாலிகள் நாம். அடுத்த ராமநவமியன்று, அயோத்தியில் ராம்லாலா கோவிலில் எதிரொலிக்கும் ஒவ்வொரு குறிப்பும் உலகம் முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

ராமர் கோவிலில் வசிக்க, ராமருக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. ராமரின் கண்ணியம் நாட்டு மக்களுக்குத் தெரியும். அதேபோல, நாட்டின் எல்லையை எப்படி பாதுகாப்பது என்பதும் தெரியும். ஜாதியின் பெயரால் இங்கு ஒரு கூட்டம் மக்களை பிரித்தாள முயற்சி செய்கிறது. விரைவில் இந்தியா உலகிலேயே மிகவும் வலுவான ஜனநாயக நாடாக மாறும்” என்றார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

Tags: PM ModidelhiDasara Festival
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசின் அலட்சியம்: சுற்றுலாப் பயணிகள் அவதி

Next Post

நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு!

Related News

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies