பிரியங்கா காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார்!
Jul 26, 2025, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரியங்கா காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார்!

Web Desk by Web Desk
Oct 25, 2023, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் கடந்த 20-ம் தேதி பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததாக பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தலை நடைபெறுக்கிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், கடந்த 20-ம் தேதி தௌசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “சமீபத்தில் தொலைக்காட்சியில் ஏதோ பார்த்தேன். அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. பிரதமர் மோடி தேவநாராயண் கோவிலுக்குச் சென்று நன்கொடை பெட்டியில் ஒரு கவரை போட்டார். அதில் என்ன இருக்கிறது என்று மக்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அதைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்து 21 ரூபாய் நோட்டு வெளியே வந்தது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரியங்கா காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், “அக்டோபர் 20-ம் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் மற்றும் ஆர்.பி. சட்டத்தை மீறி இருக்கிறார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணைய உறுப்பினர்களை இன்று சந்தித்தோம். பிரியங்கா காந்தி வத்ரா மாதிரி நடத்தை விதிகளுக்கு மேலானவரா என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்க விரும்புகிறோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி இருக்கிறோம்” என்றார்.

அதேபோல, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “பிரியங்கா காந்தி வத்ரா ஏற்கெனவே பொதுக் களத்தில் போலியானதாக அறிவிக்கப்பட்ட ஒரு செய்தியை வேண்டுமென்றே தேர்ந்தெடுத்து, அதை மீண்டும் வலியுறுத்தி ஒரு பிரச்சனையை உருவாக்க முயன்றார். இல்லாத ஒன்றை கிளப்ப முயற்சிக்கிறார்.

மாதிரி நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் நேரத்தில், அவர் மத உணர்வை அரசியல் உரையாடலில் வைக்கிறார். ஆகவே, தேர்தல் ஆணையம் இதை மிகவும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். மேலும், நோட்டீஸ் வழங்கினாலும் சரி அல்லது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதாக இருந்தாலும் சரி, அது தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பொறுத்தது” என்றார்.

Tags: Election commissionpriyanka gandhiarjun ram meghwallaw minister
ShareTweetSendShare
Previous Post

குழந்தைகள், இளைஞர்களின் மன நலம் பாதிப்பு!

Next Post

சனிக்கிழமை சந்திர கிரகணம்!

Related News

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies