பிரியங்கா காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார்!
Feb 6, 2026, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரியங்கா காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 25, 2023, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் கடந்த 20-ம் தேதி பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததாக பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தலை நடைபெறுக்கிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், கடந்த 20-ம் தேதி தௌசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “சமீபத்தில் தொலைக்காட்சியில் ஏதோ பார்த்தேன். அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. பிரதமர் மோடி தேவநாராயண் கோவிலுக்குச் சென்று நன்கொடை பெட்டியில் ஒரு கவரை போட்டார். அதில் என்ன இருக்கிறது என்று மக்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அதைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்து 21 ரூபாய் நோட்டு வெளியே வந்தது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரியங்கா காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், “அக்டோபர் 20-ம் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் மற்றும் ஆர்.பி. சட்டத்தை மீறி இருக்கிறார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணைய உறுப்பினர்களை இன்று சந்தித்தோம். பிரியங்கா காந்தி வத்ரா மாதிரி நடத்தை விதிகளுக்கு மேலானவரா என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்க விரும்புகிறோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி இருக்கிறோம்” என்றார்.

அதேபோல, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “பிரியங்கா காந்தி வத்ரா ஏற்கெனவே பொதுக் களத்தில் போலியானதாக அறிவிக்கப்பட்ட ஒரு செய்தியை வேண்டுமென்றே தேர்ந்தெடுத்து, அதை மீண்டும் வலியுறுத்தி ஒரு பிரச்சனையை உருவாக்க முயன்றார். இல்லாத ஒன்றை கிளப்ப முயற்சிக்கிறார்.

மாதிரி நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் நேரத்தில், அவர் மத உணர்வை அரசியல் உரையாடலில் வைக்கிறார். ஆகவே, தேர்தல் ஆணையம் இதை மிகவும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். மேலும், நோட்டீஸ் வழங்கினாலும் சரி அல்லது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதாக இருந்தாலும் சரி, அது தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பொறுத்தது” என்றார்.

Tags: Election commissionpriyanka gandhiarjun ram meghwallaw minister
ShareTweetSendShare
Previous Post

குழந்தைகள், இளைஞர்களின் மன நலம் பாதிப்பு!

Next Post

சனிக்கிழமை சந்திர கிரகணம்!

Related News

SMART- வேட்டையாடும் பருந்து – எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை சிதறடிக்கும்!

20 மணிநேர வேட்டை – ராணுவத்தால் கொல்லப்பட்ட JeM பயங்கரவாதி ஆதில்!

பாகிஸ்தானுக்கு இந்தியா “செக்” -அரபு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்!

புதுச்சேரியில் 8 % ஒட்டு வைத்து உள்ள திமுக தலைமை தாங்குமா? -மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!

திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய திமுகவினர்!

தடகள போட்டி- இந்தியாவிடம் ஒருதலைப்பட்சமாக நடக்கும் சீனா!

Load More

அண்மைச் செய்திகள்

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் வெளியீட்டு சேவையை நிறுத்திய சிஐஏ – காரணம் என்ன?

அணு ஆயுத வரம்பை அதிகரிக்க ரஷ்யா கோரிக்கை – டிரம்ப் மறுப்பு!

டிரம்ப்பை கொல்ல முயற்சித்தவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

55,000 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் – ஜெலென்ஸ்கி

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும் – கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை!

செஷல்ஷ் நாட்டில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் சிம்ஸ் மருத்துவக்குழு!

சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார்!

புளியரை அருகே உள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நடுக்கடலில் மயக்கமடைந்த மீனவரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை!

தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி! – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies