பிரியங்கா காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார்!
Aug 7, 2026, 10:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரியங்கா காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 25, 2023, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் கடந்த 20-ம் தேதி பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததாக பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தலை நடைபெறுக்கிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், கடந்த 20-ம் தேதி தௌசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “சமீபத்தில் தொலைக்காட்சியில் ஏதோ பார்த்தேன். அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. பிரதமர் மோடி தேவநாராயண் கோவிலுக்குச் சென்று நன்கொடை பெட்டியில் ஒரு கவரை போட்டார். அதில் என்ன இருக்கிறது என்று மக்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அதைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்து 21 ரூபாய் நோட்டு வெளியே வந்தது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரியங்கா காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், “அக்டோபர் 20-ம் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் மற்றும் ஆர்.பி. சட்டத்தை மீறி இருக்கிறார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணைய உறுப்பினர்களை இன்று சந்தித்தோம். பிரியங்கா காந்தி வத்ரா மாதிரி நடத்தை விதிகளுக்கு மேலானவரா என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்க விரும்புகிறோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி இருக்கிறோம்” என்றார்.

அதேபோல, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “பிரியங்கா காந்தி வத்ரா ஏற்கெனவே பொதுக் களத்தில் போலியானதாக அறிவிக்கப்பட்ட ஒரு செய்தியை வேண்டுமென்றே தேர்ந்தெடுத்து, அதை மீண்டும் வலியுறுத்தி ஒரு பிரச்சனையை உருவாக்க முயன்றார். இல்லாத ஒன்றை கிளப்ப முயற்சிக்கிறார்.

மாதிரி நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் நேரத்தில், அவர் மத உணர்வை அரசியல் உரையாடலில் வைக்கிறார். ஆகவே, தேர்தல் ஆணையம் இதை மிகவும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். மேலும், நோட்டீஸ் வழங்கினாலும் சரி அல்லது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதாக இருந்தாலும் சரி, அது தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பொறுத்தது” என்றார்.

Tags: Election commissionpriyanka gandhiarjun ram meghwallaw minister
Share
Tweet
SendShare
Previous Post

குழந்தைகள், இளைஞர்களின் மன நலம் பாதிப்பு!

Next Post

சனிக்கிழமை சந்திர கிரகணம்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies