பாடப்புத்தகங்களில் "பாரதம்" பெருமைக்குரிய விஷயம்: உத்தரகண்ட் முதல்வர் தாமி!
Mar 15, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாடப்புத்தகங்களில் “பாரதம்” பெருமைக்குரிய விஷயம்: உத்தரகண்ட் முதல்வர் தாமி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 06:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்ற பெயரை “பாரதம்” என்று மாற்ற வேண்டும் என்று என்.சி.இ.ஆர்.டி. குழு பரிந்துரைக்கும் நிலையில், இது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியிருக்கிறார்.

உத்தரகண்ட் மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், “உத்தரகண்ட்டில் முதலீடு செய்யுங்கள்” என்னும் திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கி இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்குச் சென்று, தங்களது மாநிலத்தில் முதலீடு செய்யும்படி அங்குள்ள தொழிலதிபர்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

அந்த வகையில், உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, நேற்று மாலை சென்னைக்கு வந்தார். அவரை தமிழக பா.ஜ.க.வினர் வரவேற்றனர். தொடர்ந்து நடந்த இரவு விருந்தின்போது, பல்வேறு தொழிலதிபர்கள் முதல்வர் தாமியை சந்தித்தனர். அப்போது, உத்தரகண்ட்டில் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

தொடர்ந்து, முதல்வர் தாமி இன்று காலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தாமி, “உத்தரகண்ட் மாநிலத்திற்கு முதலீடுகளை கொண்டு வருவதற்காக சென்னை வந்திருக்கிறேன். மாநிலத்தில் தொழில்களை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு புதிய கொள்கைகளை உருவாக்கி இருக்கிறது.

மேலும், தொழில்துறையுடன் தொடர்புடைய நபர்களின் ஆலோசனைகளை உள்ளடக்கிய கொள்கைகளிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. உத்தரகண்ட் மாநிலத்தில் தொழிற்சாலைகளுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. அதற்கேற்றார்போல, மாநிலத்தில் சாலை, இரயில், ரோப்வே மற்றும் விமான இணைப்புகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன.

உத்தரகண்ட் மாநில அரசு இதேபோன்ற உத்தரகண்ட்டில் முதலீடு செய்யுங்கள் நிகழ்ச்சியை, டெல்லி, லண்டன், பர்மிங்காம், அபுதாபி மற்றும் துபாயிலும் ஏற்பாடு செய்திருந்தது. தற்போது சென்னைக்கு வந்திருக்கிறோம். இங்கும் தொழிலதிபர்களை சந்தித்தோம். அவர்கள்உத்தரகண்ட் வருவது பற்றி பேசினார்கள். உத்தரகண்ட் உலக முதலீட்டாளர் மாநாட்டின் கீழ் இதுவரை 55,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருகின்றன” என்றார்.

தொடர்ந்து அவரிடம் சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்களில் இந்தியா என்பதற்கு பதில் பாரதம் என்று மாற்றம் செய்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் தாமி, “நாங்கள் சிறுவயதில் இருந்தே ‘பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்’ போன்ற முழக்கங்களைக் கேட்டும், எழுப்பியும் வருகிறோம். ஆகவே, இது எங்களுக்குப் பெருமைக்குரிய விஷயம்தான்” என்றார்.

நிகழ்ச்சியின்போது, மத்திய அமைச்சர் சத்பால் மகராஜ், சவுரப் பகுகுணா, செயலாளர் ஆர்.மீனாட்சி சுந்தரம், சச்சின் குர்வே மற்றும் ஆர்.ராஜேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: ChennaiuttarkhandCM pushkar singh dhami
ShareTweetSendShare
Previous Post

உலக கிரிக்கெட் போட்டியில்156 ரன்கள் எடுத்த இங்கிலாந்து!

Next Post

ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies