பாடப்புத்தகங்களில் "பாரதம்" பெருமைக்குரிய விஷயம்: உத்தரகண்ட் முதல்வர் தாமி!
Sep 12, 2026, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாடப்புத்தகங்களில் “பாரதம்” பெருமைக்குரிய விஷயம்: உத்தரகண்ட் முதல்வர் தாமி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 26, 2023, 06:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்ற பெயரை “பாரதம்” என்று மாற்ற வேண்டும் என்று என்.சி.இ.ஆர்.டி. குழு பரிந்துரைக்கும் நிலையில், இது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியிருக்கிறார்.

உத்தரகண்ட் மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், “உத்தரகண்ட்டில் முதலீடு செய்யுங்கள்” என்னும் திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கி இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்குச் சென்று, தங்களது மாநிலத்தில் முதலீடு செய்யும்படி அங்குள்ள தொழிலதிபர்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

அந்த வகையில், உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, நேற்று மாலை சென்னைக்கு வந்தார். அவரை தமிழக பா.ஜ.க.வினர் வரவேற்றனர். தொடர்ந்து நடந்த இரவு விருந்தின்போது, பல்வேறு தொழிலதிபர்கள் முதல்வர் தாமியை சந்தித்தனர். அப்போது, உத்தரகண்ட்டில் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

தொடர்ந்து, முதல்வர் தாமி இன்று காலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தாமி, “உத்தரகண்ட் மாநிலத்திற்கு முதலீடுகளை கொண்டு வருவதற்காக சென்னை வந்திருக்கிறேன். மாநிலத்தில் தொழில்களை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு புதிய கொள்கைகளை உருவாக்கி இருக்கிறது.

மேலும், தொழில்துறையுடன் தொடர்புடைய நபர்களின் ஆலோசனைகளை உள்ளடக்கிய கொள்கைகளிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. உத்தரகண்ட் மாநிலத்தில் தொழிற்சாலைகளுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. அதற்கேற்றார்போல, மாநிலத்தில் சாலை, இரயில், ரோப்வே மற்றும் விமான இணைப்புகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன.

உத்தரகண்ட் மாநில அரசு இதேபோன்ற உத்தரகண்ட்டில் முதலீடு செய்யுங்கள் நிகழ்ச்சியை, டெல்லி, லண்டன், பர்மிங்காம், அபுதாபி மற்றும் துபாயிலும் ஏற்பாடு செய்திருந்தது. தற்போது சென்னைக்கு வந்திருக்கிறோம். இங்கும் தொழிலதிபர்களை சந்தித்தோம். அவர்கள்உத்தரகண்ட் வருவது பற்றி பேசினார்கள். உத்தரகண்ட் உலக முதலீட்டாளர் மாநாட்டின் கீழ் இதுவரை 55,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருகின்றன” என்றார்.

தொடர்ந்து அவரிடம் சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்களில் இந்தியா என்பதற்கு பதில் பாரதம் என்று மாற்றம் செய்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் தாமி, “நாங்கள் சிறுவயதில் இருந்தே ‘பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்’ போன்ற முழக்கங்களைக் கேட்டும், எழுப்பியும் வருகிறோம். ஆகவே, இது எங்களுக்குப் பெருமைக்குரிய விஷயம்தான்” என்றார்.

நிகழ்ச்சியின்போது, மத்திய அமைச்சர் சத்பால் மகராஜ், சவுரப் பகுகுணா, செயலாளர் ஆர்.மீனாட்சி சுந்தரம், சச்சின் குர்வே மற்றும் ஆர்.ராஜேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: ChennaiuttarkhandCM pushkar singh dhami
Share
Tweet
SendShare
Previous Post

உலக கிரிக்கெட் போட்டியில்156 ரன்கள் எடுத்த இங்கிலாந்து!

Next Post

ஷீரடி சாய்பாபா கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies