குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலையால் பரபரப்பு!
Sep 9, 2025, 01:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலையால் பரபரப்பு!

Web Desk by Web Desk
Oct 28, 2023, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் பலன்பூர் ஜெகத்னகா பகுதியைச் சேர்ந்தவர் கனுபாய் சோலங்கி. இவரது மனைவி ஷோபாபென். மகன் மணீஷ் சோலங்கி. இவரது மனைவி ரீட்டா. இத்தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் மற்றும் 10 , 13 வயதில் 2 மகள்கள் இருந்தனர். மணீஷ் சோலங்கி பர்னிச்சர்கள் தயாரித்து விற்பனை செய்து வந்திருக்கிறார். இவரிடம் 35 தச்சர்களும் மற்றும் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மரக்கடையில் இருந்து ஒருவர் மணீஷ் சோலங்கியை பலமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார். ஆனால், மணீஷ் தொடர்ந்து தொலைபேசி அழைப்பை ஏற்காததால், அந்த நபர் நேராக வீட்டிற்கு வந்திருக்கிறார். நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியும் யாரும் திறக்காததால், சந்தேகமடைந்த அவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, காவல்துறையினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குடும்பமே இறந்து கிடந்தது தெரியவந்தது. மணீஷ் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்துகொண்டிருக்க, மற்றவர்கள் உயிரிழந்த நிலையில் கீழே இறந்து கிடந்தனர். உயிரிழந்த 7 பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனையில் மணீஷ் தந்தை, தாய், மனைவி 3 பேரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதும், மற்ற 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், காவல்துறை அந்த வீட்டிலிருந்து தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றி இருக்கிறது. அக்கடிதத்தில், “வறுமை, பொருளாதார நெருக்கடியால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தோம்” என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனினும், இதுகுறித்து காவல்துறையினர் தீர விசாரித்து வருகின்றனர். இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், “மணீஷ் மட்டுமே தற்கொலை செய்துகொண்டார் என்றே எங்களுக்குத் தகவல் வந்தது. இங்கு வந்த பிறகதான் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தற்கொலைக் குறிப்பை ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். முழுமையான விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும்” என்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: Gujratmass suicide
ShareTweetSendShare
Previous Post

போராடித் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி !

Next Post

ஆர்எஸ்எஸ் மூத்த பிரச்சாரகர் ஆர் ஹரி மறைவு !

Related News

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies