குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலையால் பரபரப்பு!
Jul 25, 2025, 07:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலையால் பரபரப்பு!

Web Desk by Web Desk
Oct 28, 2023, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் பலன்பூர் ஜெகத்னகா பகுதியைச் சேர்ந்தவர் கனுபாய் சோலங்கி. இவரது மனைவி ஷோபாபென். மகன் மணீஷ் சோலங்கி. இவரது மனைவி ரீட்டா. இத்தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் மற்றும் 10 , 13 வயதில் 2 மகள்கள் இருந்தனர். மணீஷ் சோலங்கி பர்னிச்சர்கள் தயாரித்து விற்பனை செய்து வந்திருக்கிறார். இவரிடம் 35 தச்சர்களும் மற்றும் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மரக்கடையில் இருந்து ஒருவர் மணீஷ் சோலங்கியை பலமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார். ஆனால், மணீஷ் தொடர்ந்து தொலைபேசி அழைப்பை ஏற்காததால், அந்த நபர் நேராக வீட்டிற்கு வந்திருக்கிறார். நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியும் யாரும் திறக்காததால், சந்தேகமடைந்த அவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, காவல்துறையினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குடும்பமே இறந்து கிடந்தது தெரியவந்தது. மணீஷ் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்துகொண்டிருக்க, மற்றவர்கள் உயிரிழந்த நிலையில் கீழே இறந்து கிடந்தனர். உயிரிழந்த 7 பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனையில் மணீஷ் தந்தை, தாய், மனைவி 3 பேரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதும், மற்ற 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், காவல்துறை அந்த வீட்டிலிருந்து தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றி இருக்கிறது. அக்கடிதத்தில், “வறுமை, பொருளாதார நெருக்கடியால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தோம்” என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனினும், இதுகுறித்து காவல்துறையினர் தீர விசாரித்து வருகின்றனர். இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், “மணீஷ் மட்டுமே தற்கொலை செய்துகொண்டார் என்றே எங்களுக்குத் தகவல் வந்தது. இங்கு வந்த பிறகதான் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தற்கொலைக் குறிப்பை ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். முழுமையான விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும்” என்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: Gujratmass suicide
ShareTweetSendShare
Previous Post

போராடித் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி !

Next Post

ஆர்எஸ்எஸ் மூத்த பிரச்சாரகர் ஆர் ஹரி மறைவு !

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies