குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலையால் பரபரப்பு!
Jan 14, 2026, 10:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலையால் பரபரப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 07:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் பலன்பூர் ஜெகத்னகா பகுதியைச் சேர்ந்தவர் கனுபாய் சோலங்கி. இவரது மனைவி ஷோபாபென். மகன் மணீஷ் சோலங்கி. இவரது மனைவி ரீட்டா. இத்தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் மற்றும் 10 , 13 வயதில் 2 மகள்கள் இருந்தனர். மணீஷ் சோலங்கி பர்னிச்சர்கள் தயாரித்து விற்பனை செய்து வந்திருக்கிறார். இவரிடம் 35 தச்சர்களும் மற்றும் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மரக்கடையில் இருந்து ஒருவர் மணீஷ் சோலங்கியை பலமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார். ஆனால், மணீஷ் தொடர்ந்து தொலைபேசி அழைப்பை ஏற்காததால், அந்த நபர் நேராக வீட்டிற்கு வந்திருக்கிறார். நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியும் யாரும் திறக்காததால், சந்தேகமடைந்த அவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, காவல்துறையினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குடும்பமே இறந்து கிடந்தது தெரியவந்தது. மணீஷ் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்துகொண்டிருக்க, மற்றவர்கள் உயிரிழந்த நிலையில் கீழே இறந்து கிடந்தனர். உயிரிழந்த 7 பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனையில் மணீஷ் தந்தை, தாய், மனைவி 3 பேரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதும், மற்ற 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், காவல்துறை அந்த வீட்டிலிருந்து தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றி இருக்கிறது. அக்கடிதத்தில், “வறுமை, பொருளாதார நெருக்கடியால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தோம்” என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனினும், இதுகுறித்து காவல்துறையினர் தீர விசாரித்து வருகின்றனர். இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், “மணீஷ் மட்டுமே தற்கொலை செய்துகொண்டார் என்றே எங்களுக்குத் தகவல் வந்தது. இங்கு வந்த பிறகதான் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தற்கொலைக் குறிப்பை ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். முழுமையான விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும்” என்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: Gujratmass suicide
ShareTweetSendShare
Previous Post

போராடித் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி !

Next Post

ஆர்எஸ்எஸ் மூத்த பிரச்சாரகர் ஆர் ஹரி மறைவு !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies