மன் கி பாத் நிகழ்ச்சி: எழுத்தாளர்கள் சிவசங்கரி, ஏ.கே.பெருமாளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
Sep 9, 2025, 02:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மன் கி பாத் நிகழ்ச்சி: எழுத்தாளர்கள் சிவசங்கரி, ஏ.கே.பெருமாளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Web Desk by Web Desk
Oct 29, 2023, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் எழுத்தாளர்கள் சிவசங்கரி மற்றும் ஏ.கே.பெருமாள் ஆகியோரை பாராட்டி இருக்கிறார்.

பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, 2014 அக்டோபர் மாதம் முதல் “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி இன்று தனது 106-வது “மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அப்போது, “இந்த மாதம் காதி விற்பனை கடந்த கால சாதனைகளை முறியடித்திருக்கிறது. கடந்த காலங்களில் 30,000 கோடிக்கு மட்டுமே விற்பனையான காதிப் பொருட்கள், இந்த மாதம் 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது. விவசாயிகள், குடிசைத் தொழில் செய்வோர், கைவினைக் கலைஞர்கள் ஆகியோர் இந்த விற்பனையால் பயனடைந்திருக்கிறார்கள்.

சுற்றுலா செல்லும்போதும், ஆன்மிக யாத்திரை மேற்கொள்ளும்போதும் அப்பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குங்கள். இதற்கென உங்களது பட்ஜெட்டில் நிதி ஒதுக்குங்கள். மேலும், பண்டிகை காலத்தில் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி, இலக்கியம் மூலம் ‛knit india’ என்ற இயக்கத்தை உருவாக்கி இருக்கிறார். இது இலக்கியத்தின் மூலம் நாட்டை இணைப்பதாகும். இதற்காக அவர், கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். மேலும், 18 இந்திய மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை சிவசங்கரி மொழி பெயர்த்திருக்கிறார்.

இதற்காக, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், இம்பாலில் இருந்து ஜெய்சால்மர் வரையிலும் பலமுறை நாடு முழுவதும் பயணம் செய்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுடன் கலந்துரையாடி இருக்கிறார். அதோடு, சிவசங்கரி பல்வேறு இடங்களுக்குச் சென்று பயணத் தகவல்களை வெளியிட்டார்.

இது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் உள்ளது. இத்திட்டத்தில் 4 பெரிய தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, கன்னியாகுமரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.கே.பெருமாளின் பணிகள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் கதை சொல்லும் பாரம்பரியத்தை அவர் பாதுகாத்து வருகிறார். இந்தப் பணியில் 40 ஆண்டுகளாக அவர் பணியாற்றி வருகிறார். இதுவரை அவர் 100 புத்தகங்களை இருக்கிறார். சிவசங்கரி, ஏ.கே.பெருமாளின் முயற்சிகள் அனைவராலும் பாராட்டத்தக்கது” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM ModiMaan ki baatSivasankariA.K.Perumal
ShareTweetSendShare
Previous Post

ரூ.20 கோடி பத்தாது 200 கோடி வேண்டும்: முகேஷ் அம்பானிக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

Next Post

திமுக ஆட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படுகிறது! – அண்ணாமலை.

Related News

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies