மன் கி பாத் நிகழ்ச்சி: எழுத்தாளர்கள் சிவசங்கரி, ஏ.கே.பெருமாளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
Apr 30, 2026, 12:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மன் கி பாத் நிகழ்ச்சி: எழுத்தாளர்கள் சிவசங்கரி, ஏ.கே.பெருமாளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 29, 2023, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் எழுத்தாளர்கள் சிவசங்கரி மற்றும் ஏ.கே.பெருமாள் ஆகியோரை பாராட்டி இருக்கிறார்.

பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, 2014 அக்டோபர் மாதம் முதல் “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி இன்று தனது 106-வது “மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அப்போது, “இந்த மாதம் காதி விற்பனை கடந்த கால சாதனைகளை முறியடித்திருக்கிறது. கடந்த காலங்களில் 30,000 கோடிக்கு மட்டுமே விற்பனையான காதிப் பொருட்கள், இந்த மாதம் 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது. விவசாயிகள், குடிசைத் தொழில் செய்வோர், கைவினைக் கலைஞர்கள் ஆகியோர் இந்த விற்பனையால் பயனடைந்திருக்கிறார்கள்.

சுற்றுலா செல்லும்போதும், ஆன்மிக யாத்திரை மேற்கொள்ளும்போதும் அப்பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குங்கள். இதற்கென உங்களது பட்ஜெட்டில் நிதி ஒதுக்குங்கள். மேலும், பண்டிகை காலத்தில் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி, இலக்கியம் மூலம் ‛knit india’ என்ற இயக்கத்தை உருவாக்கி இருக்கிறார். இது இலக்கியத்தின் மூலம் நாட்டை இணைப்பதாகும். இதற்காக அவர், கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். மேலும், 18 இந்திய மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை சிவசங்கரி மொழி பெயர்த்திருக்கிறார்.

இதற்காக, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், இம்பாலில் இருந்து ஜெய்சால்மர் வரையிலும் பலமுறை நாடு முழுவதும் பயணம் செய்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுடன் கலந்துரையாடி இருக்கிறார். அதோடு, சிவசங்கரி பல்வேறு இடங்களுக்குச் சென்று பயணத் தகவல்களை வெளியிட்டார்.

இது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் உள்ளது. இத்திட்டத்தில் 4 பெரிய தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, கன்னியாகுமரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.கே.பெருமாளின் பணிகள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் கதை சொல்லும் பாரம்பரியத்தை அவர் பாதுகாத்து வருகிறார். இந்தப் பணியில் 40 ஆண்டுகளாக அவர் பணியாற்றி வருகிறார். இதுவரை அவர் 100 புத்தகங்களை இருக்கிறார். சிவசங்கரி, ஏ.கே.பெருமாளின் முயற்சிகள் அனைவராலும் பாராட்டத்தக்கது” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM ModiMaan ki baatSivasankariA.K.Perumal
ShareTweetSendShare
Previous Post

ரூ.20 கோடி பத்தாது 200 கோடி வேண்டும்: முகேஷ் அம்பானிக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

Next Post

திமுக ஆட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படுகிறது! – அண்ணாமலை.

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies