ரூ.20 கோடி பத்தாது 200 கோடி வேண்டும்: முகேஷ் அம்பானிக்கு மீண்டும் கொலை மிரட்டல்!
Sep 12, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.20 கோடி பத்தாது 200 கோடி வேண்டும்: முகேஷ் அம்பானிக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 29, 2023, 03:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 20 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது 200 கோடி ரூபாய் தரவேண்டும் என்று மீண்டும் மிரட்டில் விடுக்கப்பட்டிருக்கிறது.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவராகவும், இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராகவும் திகழும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு, மர்ம நபர் ஒருவர் நேற்று முன்தினம் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்திருந்தார். அந்த இ-மெயிலில், “எனக்கு நீங்கள் 20 கோடி ரூபாய் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் சுட்டுக் கொல்லப்படுவீர்கள். என்னிடம் நன்கு குறிபார்த்து சுடும் ஸ்னைப்பர்ஸ் இருக்கிறார்கள்” என்று மிரட்டல் விடுத்திருந்தார்.

இதுகுறித்து முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் மும்பை காம்தேவி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ஷதாப் கான் என்பவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஷதாப் கானையும் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், முகேஷ் அம்பானிக்கு 2-வது முறையாக நேற்று மீண்டும் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே மிரட்டல் விடுத்த அதே நபர்தான் மீண்டும் மிரட்டல் விடுத்திருக்கிறார். அந்த இ-மெயிலில், “நான் ஏற்கெனவே 20 கோடி ரூபாய்தான் கேட்டேன். ஆனால், எனக்கு நீங்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. எனவே, தொகையை உயர்த்த முடிவு செய்திருக்கிறேன். நீங்கள் எனக்கு இனி 200 கோடி ரூபாய் தரவேண்டும். இல்லையெனில் சுட்டுக் கொல்லப்படுவீர்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்தும் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, மும்பை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அந்த இ-மெயில் எங்கிருந்து வந்திருக்கிறது என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

Tags: Mukesh AmbaniDeath threadReliance
Share
Tweet
SendShare
Previous Post

1500 கிலோ அரிசியன்னதால் பெருவுடையார் !

Next Post

மன் கி பாத் நிகழ்ச்சி: எழுத்தாளர்கள் சிவசங்கரி, ஏ.கே.பெருமாளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies