குண்டு வைத்தது நான்தான்: போலீஸில் சரணடைந்த மார்டின்!
Jan 14, 2026, 06:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குண்டு வைத்தது நான்தான்: போலீஸில் சரணடைந்த மார்டின்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 29, 2023, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடித்தது தொடர்பாக, காவல்துறையில் சரணடைந்திருக்கும் நபர், நான்தான் குண்டு வைத்தேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் கொச்சியின் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில், யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாடு கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. நிறைவு நாளான இன்று காலை 9 மணியளவில் பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, தீடீரென 3 இடங்களில் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், குழந்தைகள் உட்பட 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 7 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக மாநில காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், மத்திய புலனாய்வுப் பிரிவான தேசிய புலனாய்வு முகமை மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக, ஒரு நபரை பிடித்து விசாரித்து வரும் மாநில காவல்துறையினர், வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்தவுடன் அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற கார் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக விவாதிக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டி இருக்கிறார். டெல்லி சென்றிருக்கும் முதல்வர் பினராயி விஜயன், குண்டு வெடிப்பு குறித்த தகவல் அறிந்ததும், கேரளாவுக்கு புறப்பட்டிருக்கிறார். கேரளா வந்தவுடன் குண்டு வெடிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிவார் என்று கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடித்தது டிபன் பாக்ஸ் வகை வெடிகுண்டு என்பதை காவல்துறையினர் கண்டறிந்திருக்கிறார்கள். மேலும், குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதுதவிர, தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், நான்தான் வெடிகுண்டு வைத்தேன் என்று சொல்லி திருச்சூரில் உள்ள கொடக்கரா காவல் நிலையில் ஒருவர் சரணடைந்திருக்கிறார். அவர், கொச்சியைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் டொமினிக் மார்ட்டின் என்பதும், அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்திருக்கிறது. எனினும், உண்மையிலேயே அவர்தான் வெடிகுண்டு வைத்தாரா அல்லது யாரையாவது காப்பாற்ற அப்படிச் சொல்கிறாரா என்பது குறித்து அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேசமயம், குண்டு வெடிப்பு தொடர்பாக மார்டின் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் பேசும் மார்டின், “குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு நான்தான் பொறுப்பு. நான் 16 வருடங்களாக யெகோவா சபையின் விசுவாசியாக இருந்தேன். சபையின் செயல்பாடுகள் பிடிக்காததால் கடந்த 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்குச் செல்வதில்லை. சபையின் நிர்வாகிகள் கூறும் கருத்து விரும்பத்தகாத வகையில் இருந்தது. சபையினர் தேச துரோக கருத்துகளைக் கூறி வந்தனர். அதை திருத்த முயற்சித்தும் பயனில்லை. அதனால் இவ்வாறு செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: KeralaBomb blastMartin
ShareTweetSendShare
Previous Post

மலேசியாவை வீழ்த்திய இந்திய பெண்கள் !

Next Post

இந்தியா, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் : அட்டவணை !

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies