குண்டு வைத்தது நான்தான்: போலீஸில் சரணடைந்த மார்டின்!
Jun 14, 2026, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குண்டு வைத்தது நான்தான்: போலீஸில் சரணடைந்த மார்டின்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 29, 2023, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடித்தது தொடர்பாக, காவல்துறையில் சரணடைந்திருக்கும் நபர், நான்தான் குண்டு வைத்தேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் கொச்சியின் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில், யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாடு கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. நிறைவு நாளான இன்று காலை 9 மணியளவில் பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, தீடீரென 3 இடங்களில் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், குழந்தைகள் உட்பட 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 7 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக மாநில காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், மத்திய புலனாய்வுப் பிரிவான தேசிய புலனாய்வு முகமை மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக, ஒரு நபரை பிடித்து விசாரித்து வரும் மாநில காவல்துறையினர், வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்தவுடன் அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற கார் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக விவாதிக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டி இருக்கிறார். டெல்லி சென்றிருக்கும் முதல்வர் பினராயி விஜயன், குண்டு வெடிப்பு குறித்த தகவல் அறிந்ததும், கேரளாவுக்கு புறப்பட்டிருக்கிறார். கேரளா வந்தவுடன் குண்டு வெடிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிவார் என்று கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடித்தது டிபன் பாக்ஸ் வகை வெடிகுண்டு என்பதை காவல்துறையினர் கண்டறிந்திருக்கிறார்கள். மேலும், குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதுதவிர, தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், நான்தான் வெடிகுண்டு வைத்தேன் என்று சொல்லி திருச்சூரில் உள்ள கொடக்கரா காவல் நிலையில் ஒருவர் சரணடைந்திருக்கிறார். அவர், கொச்சியைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் டொமினிக் மார்ட்டின் என்பதும், அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்திருக்கிறது. எனினும், உண்மையிலேயே அவர்தான் வெடிகுண்டு வைத்தாரா அல்லது யாரையாவது காப்பாற்ற அப்படிச் சொல்கிறாரா என்பது குறித்து அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேசமயம், குண்டு வெடிப்பு தொடர்பாக மார்டின் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் பேசும் மார்டின், “குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு நான்தான் பொறுப்பு. நான் 16 வருடங்களாக யெகோவா சபையின் விசுவாசியாக இருந்தேன். சபையின் செயல்பாடுகள் பிடிக்காததால் கடந்த 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்குச் செல்வதில்லை. சபையின் நிர்வாகிகள் கூறும் கருத்து விரும்பத்தகாத வகையில் இருந்தது. சபையினர் தேச துரோக கருத்துகளைக் கூறி வந்தனர். அதை திருத்த முயற்சித்தும் பயனில்லை. அதனால் இவ்வாறு செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: KeralaBomb blastMartin
ShareTweetSendShare
Previous Post

மலேசியாவை வீழ்த்திய இந்திய பெண்கள் !

Next Post

இந்தியா, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் : அட்டவணை !

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies