கேரள குண்டு வெடிப்பு: மத்திய அமைச்சர் ஆய்வு!
Oct 26, 2025, 02:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள குண்டு வெடிப்பு: மத்திய அமைச்சர் ஆய்வு!

Web Desk by Web Desk
Oct 30, 2023, 08:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் 3 பேர் உயிரிழப்புக்குக் காரணமான குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள களமச்சேரியில், யெகோவாவின் சாட்சிகள் சபை எனும் கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்தவர்கள் கடந்த 27-ம் தேதி முதல் மாநாடு நடத்தி வந்தனர். இதன் நிறைவு நாளான நேற்று சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 3 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இதில், சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்களில் மற்றொரு பெண்ணும், ஒரு சிறுமியும் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு அதே சமூகத்தைச் சேர்ந்த டொமினிக் மார்டின் என்பவர் பொறுப்பேற்றிருக்கிறார்.

எனினும், இது தீவிரவாத சதியா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏனெனில், தீவிரவாதிகள் பயன்படுத்தும் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு உட்பட பல்வேறு புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கேரள குண்டு வெடிப்புக்கு ஹமாஸ் ஆதரவுதான் காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியிருந்தார். காரணம், இச்சம்பவம் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்புதான், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கேரளாவில் பேரணி நடந்தது. இப்பேரணியில் ஹமாஸ் மாஜி தலைவர் மஷால் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கேரளாவில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். முன்னதாக, காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த களமச்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

Tags: KeralaCentral MinisterRajiv Chandrasekar
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 இலக்கு !

Next Post

அமர் பிரசாத் ரெட்டி வழக்கு: அது ஜே.சி.பி. இல்லியாம்… டி.வி.எஸ். எக்ஸ்எல் சூப்பராம்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies