கேரள குண்டு வெடிப்பு: மத்திய அமைச்சர் ஆய்வு!
Mar 15, 2026, 09:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள குண்டு வெடிப்பு: மத்திய அமைச்சர் ஆய்வு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 30, 2023, 08:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் 3 பேர் உயிரிழப்புக்குக் காரணமான குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள களமச்சேரியில், யெகோவாவின் சாட்சிகள் சபை எனும் கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்தவர்கள் கடந்த 27-ம் தேதி முதல் மாநாடு நடத்தி வந்தனர். இதன் நிறைவு நாளான நேற்று சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 3 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இதில், சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்களில் மற்றொரு பெண்ணும், ஒரு சிறுமியும் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு அதே சமூகத்தைச் சேர்ந்த டொமினிக் மார்டின் என்பவர் பொறுப்பேற்றிருக்கிறார்.

எனினும், இது தீவிரவாத சதியா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏனெனில், தீவிரவாதிகள் பயன்படுத்தும் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு உட்பட பல்வேறு புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கேரள குண்டு வெடிப்புக்கு ஹமாஸ் ஆதரவுதான் காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியிருந்தார். காரணம், இச்சம்பவம் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்புதான், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கேரளாவில் பேரணி நடந்தது. இப்பேரணியில் ஹமாஸ் மாஜி தலைவர் மஷால் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கேரளாவில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். முன்னதாக, காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த களமச்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

Tags: KeralaCentral MinisterRajiv Chandrasekar
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 இலக்கு !

Next Post

அமர் பிரசாத் ரெட்டி வழக்கு: அது ஜே.சி.பி. இல்லியாம்… டி.வி.எஸ். எக்ஸ்எல் சூப்பராம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies