இளைஞர்கள் ஒன்றிணைந்தால் இலக்கை அடைய முடியும்: பிரதமர் மோடி!
Mar 15, 2026, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளைஞர்கள் ஒன்றிணைந்தால் இலக்கை அடைய முடியும்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 31, 2023, 07:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“என் மண் என் தேசம்” இயக்கத்தின் அமிர்த கலச யாத்திரையின் நிறைவு நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முன்னேற்றத்திற்கான இலக்குகளை இளைஞர்கள் ஒன்றிணைந்தால் அடைய முடியும் என்று கூறினார்.

கடந்த சுதந்திர தின விழா உரையின்போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “நம் தேசத்திற்காக வீர மரணமடைந்த இராணுவ வீரர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் “என் மண், என் தேசம்” என்ற இயக்கம் தொடங்கப்படும். இதற்காக அமிர்த கலச யாத்திரை தொடங்கப்படும்.

இந்த யாத்திரையின்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விதைகள் மற்றும் மண் சேகரிக்கப்பட்டு கலசங்களில் நிரப்பப்பட்டு, டெல்லிக்கு கொண்டு வரப்படும். அந்த மண் தேசிய போர் வீரர்கள் நினைவிடத்துக்கு அருகே இருக்கும் பூங்காவில் கொட்டப்படும். அங்கு மரக்கன்றுகள் நடப்படும்” என்று கூறியிருந்தார்.

அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு கடந்த 29-ம் தேதி டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. இது இன்று டெல்லி கடமை பாதையில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்துக்கு அருகே உள்ள பூங்காவில் கொட்டப்பட்டது. அந்த மண்ணை வணங்கிய மோடி, நெற்றியில் திலகமிட்டுக் கொண்டார்.

பின்னர், ‘அமிர்த வாடிகா’ மற்றும் ‘ஆசாதி கா அமிர்த மஹோத்சவ் ஸ்மாரக்’ ஆகியவற்றை திறந்து வைத்த பிரதமர் மோடி, “அமிர்த மஹோத்சவ் நினைவுச் சின்னம் வருங்கால சந்ததியினருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைப் பற்றிச் சொல்லும்” என்றார்.

மேலும், ‘மேரா யுவ பாரத் போர்ட்டலை’ தொடங்கி வைத்த பிரதமர் மோடி, “21-ம் நூற்றாண்டில் நாட்டின் வளர்ச்சியில் ‘மேரா பாரத் யுவா’ அமைப்பு பெரும் பங்கு வகிக்கும். இளைஞர்கள் ஒன்றிணைந்தால் ஒவ்வொரு இலக்கையும் எப்படி அடைய முடியும் என்பதற்கு “என் மண் என் தேசம்” ஒரு எடுத்துக்காட்டு.

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த “என் மண் என் தேசம்” நிகழ்ச்சியில் தண்டி யாத்திரைக்கு திரண்டது போல மக்கள் திரண்டுள்ளனர். இது புதிய சரித்திரம் படைக்கும்” என்றார். நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்துகொண்டார்.

Tags: PM ModidelhiMeri matti mera desh
ShareTweetSendShare
Previous Post

ஆன்லைன் மேப்பில் இஸ்ரேலை நீக்கிய சீன நிறுவனம்!

Next Post

பட்டதாரி இளைஞர் கனகராஜ் மரணம்! – நேரில் சென்று அண்ணாமலை ஆறுதல்!

Related News

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies