இளைஞர்கள் ஒன்றிணைந்தால் இலக்கை அடைய முடியும்: பிரதமர் மோடி!
Aug 17, 2026, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இளைஞர்கள் ஒன்றிணைந்தால் இலக்கை அடைய முடியும்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 31, 2023, 07:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“என் மண் என் தேசம்” இயக்கத்தின் அமிர்த கலச யாத்திரையின் நிறைவு நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முன்னேற்றத்திற்கான இலக்குகளை இளைஞர்கள் ஒன்றிணைந்தால் அடைய முடியும் என்று கூறினார்.

கடந்த சுதந்திர தின விழா உரையின்போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “நம் தேசத்திற்காக வீர மரணமடைந்த இராணுவ வீரர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் “என் மண், என் தேசம்” என்ற இயக்கம் தொடங்கப்படும். இதற்காக அமிர்த கலச யாத்திரை தொடங்கப்படும்.

இந்த யாத்திரையின்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விதைகள் மற்றும் மண் சேகரிக்கப்பட்டு கலசங்களில் நிரப்பப்பட்டு, டெல்லிக்கு கொண்டு வரப்படும். அந்த மண் தேசிய போர் வீரர்கள் நினைவிடத்துக்கு அருகே இருக்கும் பூங்காவில் கொட்டப்படும். அங்கு மரக்கன்றுகள் நடப்படும்” என்று கூறியிருந்தார்.

அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு கடந்த 29-ம் தேதி டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. இது இன்று டெல்லி கடமை பாதையில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்துக்கு அருகே உள்ள பூங்காவில் கொட்டப்பட்டது. அந்த மண்ணை வணங்கிய மோடி, நெற்றியில் திலகமிட்டுக் கொண்டார்.

பின்னர், ‘அமிர்த வாடிகா’ மற்றும் ‘ஆசாதி கா அமிர்த மஹோத்சவ் ஸ்மாரக்’ ஆகியவற்றை திறந்து வைத்த பிரதமர் மோடி, “அமிர்த மஹோத்சவ் நினைவுச் சின்னம் வருங்கால சந்ததியினருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைப் பற்றிச் சொல்லும்” என்றார்.

மேலும், ‘மேரா யுவ பாரத் போர்ட்டலை’ தொடங்கி வைத்த பிரதமர் மோடி, “21-ம் நூற்றாண்டில் நாட்டின் வளர்ச்சியில் ‘மேரா பாரத் யுவா’ அமைப்பு பெரும் பங்கு வகிக்கும். இளைஞர்கள் ஒன்றிணைந்தால் ஒவ்வொரு இலக்கையும் எப்படி அடைய முடியும் என்பதற்கு “என் மண் என் தேசம்” ஒரு எடுத்துக்காட்டு.

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த “என் மண் என் தேசம்” நிகழ்ச்சியில் தண்டி யாத்திரைக்கு திரண்டது போல மக்கள் திரண்டுள்ளனர். இது புதிய சரித்திரம் படைக்கும்” என்றார். நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்துகொண்டார்.

Tags: PM ModidelhiMeri matti mera desh
Share
Tweet
SendShare
Previous Post

ஆன்லைன் மேப்பில் இஸ்ரேலை நீக்கிய சீன நிறுவனம்!

Next Post

பட்டதாரி இளைஞர் கனகராஜ் மரணம்! – நேரில் சென்று அண்ணாமலை ஆறுதல்!

Related News

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகம் – பொதுமக்கள் புகார்!

போதைப்பொருள் புழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது – சட்டசபையில் காரசார விவாதம்!

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கை திசை திருப்ப வேண்டாம் – அமைச்சர் நிர்மல்குமார்

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் – பணிகள் தீவிரம்!

காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் மாயம் – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

ஆகஸ்ட் 28 முதல் தொடர் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் தொழிற்சங்கள் அறிவிப்பு!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies