ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 25 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானில் மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தை செயல்படுத்தியதில் ரூ.20,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக பாஜக எம்பி கிரோடி லால் மீனா கடந்த ஜூன் மாதம் குற்றம் சாட்டினார்.
இந்தத் திட்டத்தின் 48 திட்டங்களில் போலி அனுபவச் சான்றிதழின் அடிப்படையில் இரண்டு நிறுவனங்களுக்கு ரூ.900 கோடி மதிப்பிலான டெண்டர் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த மாதம், ஜெய்ப்பூர் மற்றும் சிகாரில் உள்ள மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடசரா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி வீடு உள்ளிட்ட 25 இடங்களில் அமலாக்ககத்துறையினர் இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஜல் ஜீவன் மிஷன் வீட்டுக் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.