இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
மகளிருக்கான 7 வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா தவிா்த்து, சீனா, நடப்பு சாம்பியன் ஜப்பான், தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
இதில் நேற்றையப் போட்டிகள் ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்தியா மற்றும் தென் கொரியா விளையாடியப் போட்டியில் இந்தியா அணி தென் கொரியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி வாகையை சூட்டியுள்ளது.
இந்தப் போட்டியில் சலிமா டெடெ 6 மற்றும் 36 வது நிமிடங்களில் கோல் அடித்தார். பின்பு நவ்நீத் கவுர் 36 வது நிமிடத்திலும், வந்தனா கட்டாரியா 49 வது நிமிடத்திலும், நேஹா 60 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
தென் கொரியா அணியின் வீராங்கனைகள் எவ்வளவு முயற்சி செய்தும் கடைசிவரை கோல் அடிக்க முடியாமல் போனது.
இதனால் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
அதேபோல் தென் கொரியா அணி 7 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. இதனால் நவம்பர் 4 ஆம் தேதி இந்தியா மற்றும் தென் கொரியா அணிகளுக்கிடையே அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.