"இண்டி" கூட்டணி சிதைந்து விட்டது: சிவராஜ் சிங் சௌஹான் தாக்கு!
Mar 15, 2026, 08:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“இண்டி” கூட்டணி சிதைந்து விட்டது: சிவராஜ் சிங் சௌஹான் தாக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 3, 2023, 04:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இண்டி கூட்டணி உருவாவதற்கு முன்பே சிதைந்து விட்டது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியிருக்கிறார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார், “காங்கிரஸ் கட்சி 5 மாநிலத் தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. கூட்டணியை வலுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. வளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் பகுதிக்கு யாராவது ஒரு பாவத்தை செய்திருப்பார்களேயானால், அது காங்கிரஸ் கட்சியாகத்தான் இருக்கும்” என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் கருத்து குறித்து கூறுகையில், “இண்டி கூட்டணி உருவாவதற்கு முன்பே சிதைந்து விட்டது. இதை பீகார் முதல்வர் நிதீஷ் குமரே உறுதிப்படுத்தி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, இதற்கு முன்பும் இப்படித்தான் இருந்தது. அவர்களுக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை. தங்களது குடும்பத்தைப் பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறார்கள். சோனியா காந்தியைப் பொறுத்தவரை, தனது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோரை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்.

அதேபோல, முன்னாள் முதல்வர் கமல்நாத் தனது மகன் சிந்த்வாரா தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் நகுல் நாத்தை முன்னிறுத்துவதில் மும்முரமாக இருக்கிறார். மேலும், மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் திக்விஜய் சிங்கும் தனது மகன் ராகோகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஜெயவர்தன் சிங்கை முன்னிலைப்படுத்துவதில்தான் மும்முரமாக இருக்கிறார்.

எது எப்படியோ இண்டி கூட்டணி உருவாவதற்கு முன்பே சிதைந்து விட்டது என்பது மட்டும் உண்மை. அதேபோல, காங்கிரஸ் கட்சியும் சிதைந்து கொண்டிருக்கிறது. மேலும், காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்துக்கும் எந்த நன்மையையும் செய்யாது, செய்ய முடியாது. அதோடு, கமல்நாத்தும், திக்விஜய் சிங்கும் சினிமாவில் வரும் ஷ்யாம், சேனு இரட்டையர்களைப் போல தங்களது பதவிக்காக அடித்துக் கொள்கிறார்கள்” என்றார்.

Tags: interviewMadya PradeshCM Sivaraj Singh Chouhan
ShareTweetSendShare
Previous Post

பூபேஷ் பாகல் ப்ரீ பெய்டு முதல்வர்: அமித்ஷா கடும் தாக்கு!

Next Post

பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்! – வெளியுறவுத் துறை அமைச்சர்ஜெய்சங்கர்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies