"இண்டி" கூட்டணி சிதைந்து விட்டது: சிவராஜ் சிங் சௌஹான் தாக்கு!
Jul 30, 2026, 09:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“இண்டி” கூட்டணி சிதைந்து விட்டது: சிவராஜ் சிங் சௌஹான் தாக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 3, 2023, 04:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இண்டி கூட்டணி உருவாவதற்கு முன்பே சிதைந்து விட்டது என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியிருக்கிறார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார், “காங்கிரஸ் கட்சி 5 மாநிலத் தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. கூட்டணியை வலுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. வளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் பகுதிக்கு யாராவது ஒரு பாவத்தை செய்திருப்பார்களேயானால், அது காங்கிரஸ் கட்சியாகத்தான் இருக்கும்” என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் கருத்து குறித்து கூறுகையில், “இண்டி கூட்டணி உருவாவதற்கு முன்பே சிதைந்து விட்டது. இதை பீகார் முதல்வர் நிதீஷ் குமரே உறுதிப்படுத்தி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, இதற்கு முன்பும் இப்படித்தான் இருந்தது. அவர்களுக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை. தங்களது குடும்பத்தைப் பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறார்கள். சோனியா காந்தியைப் பொறுத்தவரை, தனது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோரை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்.

அதேபோல, முன்னாள் முதல்வர் கமல்நாத் தனது மகன் சிந்த்வாரா தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் நகுல் நாத்தை முன்னிறுத்துவதில் மும்முரமாக இருக்கிறார். மேலும், மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் திக்விஜய் சிங்கும் தனது மகன் ராகோகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஜெயவர்தன் சிங்கை முன்னிலைப்படுத்துவதில்தான் மும்முரமாக இருக்கிறார்.

எது எப்படியோ இண்டி கூட்டணி உருவாவதற்கு முன்பே சிதைந்து விட்டது என்பது மட்டும் உண்மை. அதேபோல, காங்கிரஸ் கட்சியும் சிதைந்து கொண்டிருக்கிறது. மேலும், காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்துக்கும் எந்த நன்மையையும் செய்யாது, செய்ய முடியாது. அதோடு, கமல்நாத்தும், திக்விஜய் சிங்கும் சினிமாவில் வரும் ஷ்யாம், சேனு இரட்டையர்களைப் போல தங்களது பதவிக்காக அடித்துக் கொள்கிறார்கள்” என்றார்.

Tags: interviewMadya PradeshCM Sivaraj Singh Chouhan
ShareTweetSendShare
Previous Post

பூபேஷ் பாகல் ப்ரீ பெய்டு முதல்வர்: அமித்ஷா கடும் தாக்கு!

Next Post

பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்! – வெளியுறவுத் துறை அமைச்சர்ஜெய்சங்கர்

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies