சூதாட்ட பிரமுகர்களிடம் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.508 கோடி வசூல்!
Jan 14, 2026, 11:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூதாட்ட பிரமுகர்களிடம் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.508 கோடி வசூல்!

அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளர்களிடம் இருந்து சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலுக்கு இதுவரை 508 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக சட்டமன்றத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வரும் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மகாதேவ் சூதாட்ட செயலியின் முக்கியப் பிரமுகர்கள், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலுக்காக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகலுக்கு அதிகளவில் பணம் கொடுத்திருப்பதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அம்மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, துபாயில் இருந்து வந்த அசிம் தாஸ் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் சோதனை நடத்தியதில் 5.39 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து முதல்வர் பூபேஷ் பாகலுக்கு இதுவரை 508 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருக்கிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அசிம் தாஸ் என்கிற இடைத்தரகா் ராய்பூரில் 5.39 கோடி ரூபாய் ரொக்கப் பணத்துடன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இப்பணம் மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளா்களால் சத்தீஸ்கர் மாநிலத் தோ்தல் செலவுகளுக்காக காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பப்பட்ட பணம் என்கிற சந்தேகம் நிலவுகிறது. அசிம் தாஸிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவரது செல்போனில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் பகுப்பாய்வு ஆகியவை சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பாகல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்திருக்கின்றன.

பாகலுக்கு இதுவரை 508 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக தெரியவருகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மகாதேவ் செயலியின் சில பினாமி வங்கிக் கணக்குகளில் உள்ள 15.59 கோடி ரூபாய் சட்டவிரோத பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர, பண விவகாரம் தொடர்பாக செயலியின் உரிமையாளர்கள் சவுரவ் சந்திராகா், ரவி உப்பால் உட்பட 14 பேருக்கு எதிராக சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ChhattisgarhCM Bupesh Bahel508 crores
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல்!

Next Post

சென்னையில் கனமழை: திமுக அரசு அலட்சியம் – மக்கள் வேதனை

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies