சூதாட்ட பிரமுகர்களிடம் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.508 கோடி வசூல்!
Oct 25, 2025, 12:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூதாட்ட பிரமுகர்களிடம் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.508 கோடி வசூல்!

அமலாக்கத்துறை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 4, 2023, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளர்களிடம் இருந்து சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகலுக்கு இதுவரை 508 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக சட்டமன்றத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வரும் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மகாதேவ் சூதாட்ட செயலியின் முக்கியப் பிரமுகர்கள், சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலுக்காக அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகலுக்கு அதிகளவில் பணம் கொடுத்திருப்பதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அம்மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, துபாயில் இருந்து வந்த அசிம் தாஸ் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் சோதனை நடத்தியதில் 5.39 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் இருந்து முதல்வர் பூபேஷ் பாகலுக்கு இதுவரை 508 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருக்கிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “அசிம் தாஸ் என்கிற இடைத்தரகா் ராய்பூரில் 5.39 கோடி ரூபாய் ரொக்கப் பணத்துடன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இப்பணம் மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளா்களால் சத்தீஸ்கர் மாநிலத் தோ்தல் செலவுகளுக்காக காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பப்பட்ட பணம் என்கிற சந்தேகம் நிலவுகிறது. அசிம் தாஸிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவரது செல்போனில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் பகுப்பாய்வு ஆகியவை சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பாகல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்திருக்கின்றன.

பாகலுக்கு இதுவரை 508 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக தெரியவருகிறது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மகாதேவ் செயலியின் சில பினாமி வங்கிக் கணக்குகளில் உள்ள 15.59 கோடி ரூபாய் சட்டவிரோத பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் முடக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர, பண விவகாரம் தொடர்பாக செயலியின் உரிமையாளர்கள் சவுரவ் சந்திராகா், ரவி உப்பால் உட்பட 14 பேருக்கு எதிராக சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 508 croresChhattisgarhCM Bupesh Bahel
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல்!

Next Post

சென்னையில் கனமழை: திமுக அரசு அலட்சியம் – மக்கள் வேதனை

Related News

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

பேச்சிப்பாறை அணை திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை – சாலையில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் – ஹெச்.ராஜா விமர்சனம்!

இன்றைய தங்கம் விலை!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறலை பாகிஸ்தான் கைவிட வேண்டும் – ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி வலியுறுத்தல்!

சட்டமன்ற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

வடகிழக்கு பருவமழை பாதிப்பு – மத்திய குழு இன்று ஆய்வு!

செஞ்சி அருகே தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய நெற்பயிர் – விவசாயிகள் வேதனை!

வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மண்டலமாக வலுவடையக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies