பிரதமர் மோடியை வரைந்த சிறுமி: வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதிய பிரதமர்!
Aug 15, 2025, 11:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியை வரைந்த சிறுமி: வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதிய பிரதமர்!

Web Desk by Web Desk
Nov 4, 2023, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது, தன்னை ஓவியமாக வரைந்து கொடுத்த சிறுமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டும், நன்றியும் தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து, பரிசீலனையும் நிறைவடைந்து விட்டது.

இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதையடுத்து, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வகையில், அம்மாநிலத்தின் கன்கேர் பகுதியில் பா.ஜ.க. சார்பில் கடந்த 2-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமி பிரதமர் மோடியின் ஓவியத்தை தனது கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ட பிரதமர் மோடி, அச்சிறுமியிடமிருந்து நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் உடனடியாக ஓவியத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

மேலும், அந்த ஓவியத்திலேயே அச்சிறுமியின் வீட்டு முகவரியை எழுதிக் கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அதோடு, தான் அச்சிறுமிக்கு நிச்சயமாக கடிதம் எழுதுவேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். அப்போது, அச்சிறுமி கான்கேர் பகுதியைச் சேர்ந்த அகன்ஷா என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், அச்சிறுமிக்குக் கடிதம் எழுதி பிரதமர் மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார். சிறுமிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- “அன்புள்ள அகன்ஷாவுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள். கான்கேரின் கூட்டத்தில் நீங்கள் கொண்டு வந்த ஓவியம் என்னை அடைந்தது. இந்த அன்புக்கு மிக்க நன்றி. இந்தியாவின் மகள்கள் நாட்டின் பிரகாசமான எதிர்காலம்.

உங்கள் அனைவரிடமிருந்தும் நான் பெறும் இந்த பாசமும் சொந்தமும் தேச சேவைக்கு எனது பலமாகும். நமது மகள்களுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் அனைத்தும் நிறைந்த தேசத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். நீங்கள் சிறந்த வெற்றியுடன் முன்னேறி, உங்கள் வெற்றிகளால் உங்கள் குடும்பம், சமூகம் மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்க்கட்டும். உங்கள் எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள்.

அடுத்த 25 ஆண்டுகள் உங்களைப் போன்ற இளம் மகள்களுக்கு முக்கியமானதாக இருக்கும். இந்த ஆண்டுகளில், நம் இளம் தலைமுறை, குறிப்பாக உங்களைப் போன்ற மகள்கள், அவர்களின் கனவுகளை நிறைவேற்றி, நாட்டின் எதிர்காலத்திற்கு புதிய திசையை வழங்குவார்கள். சத்தீஸ்கர் மக்களிடம் நான் எப்போதும் மிகுந்த அன்பைப் பெற்றுள்ளேன். நாட்டின் முன்னேற்றப் பாதையில் மாநில மக்களும் ஆர்வத்துடன் பங்களித்துள்ளனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: PM ModiChhattisgarhletter to girl
ShareTweetSendShare
Previous Post

ஊழலில் திளைக்கும் காங்கிரஸ் மாநில அரசுகள்

Next Post

இந்தியாவில் ரூ. 52,400 கோடி முதலீடு செய்துள்ள இத்தாலி நிறுவனங்கள்

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies