பிரதமர் மோடியை வரைந்த சிறுமி: வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதிய பிரதமர்!
Sep 9, 2026, 09:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியை வரைந்த சிறுமி: வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதிய பிரதமர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 04:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது, தன்னை ஓவியமாக வரைந்து கொடுத்த சிறுமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டும், நன்றியும் தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து, பரிசீலனையும் நிறைவடைந்து விட்டது.

இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதையடுத்து, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வகையில், அம்மாநிலத்தின் கன்கேர் பகுதியில் பா.ஜ.க. சார்பில் கடந்த 2-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமி பிரதமர் மோடியின் ஓவியத்தை தனது கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ட பிரதமர் மோடி, அச்சிறுமியிடமிருந்து நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் உடனடியாக ஓவியத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

மேலும், அந்த ஓவியத்திலேயே அச்சிறுமியின் வீட்டு முகவரியை எழுதிக் கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அதோடு, தான் அச்சிறுமிக்கு நிச்சயமாக கடிதம் எழுதுவேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். அப்போது, அச்சிறுமி கான்கேர் பகுதியைச் சேர்ந்த அகன்ஷா என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், அச்சிறுமிக்குக் கடிதம் எழுதி பிரதமர் மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார். சிறுமிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- “அன்புள்ள அகன்ஷாவுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள். கான்கேரின் கூட்டத்தில் நீங்கள் கொண்டு வந்த ஓவியம் என்னை அடைந்தது. இந்த அன்புக்கு மிக்க நன்றி. இந்தியாவின் மகள்கள் நாட்டின் பிரகாசமான எதிர்காலம்.

உங்கள் அனைவரிடமிருந்தும் நான் பெறும் இந்த பாசமும் சொந்தமும் தேச சேவைக்கு எனது பலமாகும். நமது மகள்களுக்கு ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் அனைத்தும் நிறைந்த தேசத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். நீங்கள் சிறந்த வெற்றியுடன் முன்னேறி, உங்கள் வெற்றிகளால் உங்கள் குடும்பம், சமூகம் மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்க்கட்டும். உங்கள் எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள்.

அடுத்த 25 ஆண்டுகள் உங்களைப் போன்ற இளம் மகள்களுக்கு முக்கியமானதாக இருக்கும். இந்த ஆண்டுகளில், நம் இளம் தலைமுறை, குறிப்பாக உங்களைப் போன்ற மகள்கள், அவர்களின் கனவுகளை நிறைவேற்றி, நாட்டின் எதிர்காலத்திற்கு புதிய திசையை வழங்குவார்கள். சத்தீஸ்கர் மக்களிடம் நான் எப்போதும் மிகுந்த அன்பைப் பெற்றுள்ளேன். நாட்டின் முன்னேற்றப் பாதையில் மாநில மக்களும் ஆர்வத்துடன் பங்களித்துள்ளனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: PM ModiChhattisgarhletter to girl
Share
Tweet
SendShare
Previous Post

ஊழலில் திளைக்கும் காங்கிரஸ் மாநில அரசுகள்

Next Post

இந்தியாவில் ரூ. 52,400 கோடி முதலீடு செய்துள்ள இத்தாலி நிறுவனங்கள்

Related News

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies