உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி!
Aug 15, 2025, 07:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி!

Web Desk by Web Desk
Nov 5, 2023, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்போது இந்தியா பலவீனமான நாடு அல்ல. உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அசைக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இம்மாதம் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இவற்றில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார்கள். மேலும், பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார்.

அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “மத்திய பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இது வெறும் சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல, லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாகும். இந்திய மக்கள் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க விரும்புகிறார்கள்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் நேர்மை மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கான முயற்சிகளை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. கடந்த 10 வருடங்களில் மத்தியப் பிரதேசத்தின் வளர்ச்சி விகிதம், நாட்டின் வளர்ச்சி விகிதத்திற்கு இணையாக உள்ளது. நாட்டிலேயே அதிக தொழில்துறை கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல.

காங்கிரஸ் ஆட்சியின் போது வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியா பலவீனமான நாடு என்று கூறுவார்கள். ஆனால், தற்போது இந்தியாவின் பெருமை உலகம் முழுவதும் உயர்ந்து வருகிறது. இன்றைய இந்தியா பலவீனமான நாடு அல்ல. உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது.

1947-ம் ஆண்டில் இருந்து பல ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தை காங்கிரஸ் அரசு ஆண்டது. இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் மத்தியப் பிரதேசத்தை வளர்க்க முடியவில்லை. ஆனால், கடந்த 15 முதல் 16 ஆண்டுகளில் மாநிலத்தை வளர்த்து, உங்கள் முன்பு பா.ஜ.க. ஆட்சி நிருபித்திருக்கிறது” என்றார்.

Tags: Rajnath Singhdefence ministerMadya Pradesh
ShareTweetSendShare
Previous Post

இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

Next Post

காங்கிரஸ் “4 சி” பார்முலாவில் செயல்பட்டது: ம.பி.யில் அமித்ஷா தாக்கு!

Related News

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies