உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி!
Sep 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 10:47 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தற்போது இந்தியா பலவீனமான நாடு அல்ல. உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அசைக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இம்மாதம் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இவற்றில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார்கள். மேலும், பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார்.

அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “மத்திய பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இது வெறும் சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல, லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாகும். இந்திய மக்கள் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க விரும்புகிறார்கள்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் நேர்மை மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கான முயற்சிகளை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. கடந்த 10 வருடங்களில் மத்தியப் பிரதேசத்தின் வளர்ச்சி விகிதம், நாட்டின் வளர்ச்சி விகிதத்திற்கு இணையாக உள்ளது. நாட்டிலேயே அதிக தொழில்துறை கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல.

காங்கிரஸ் ஆட்சியின் போது வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியா பலவீனமான நாடு என்று கூறுவார்கள். ஆனால், தற்போது இந்தியாவின் பெருமை உலகம் முழுவதும் உயர்ந்து வருகிறது. இன்றைய இந்தியா பலவீனமான நாடு அல்ல. உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அச்சுறுத்த முடியாது.

1947-ம் ஆண்டில் இருந்து பல ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தை காங்கிரஸ் அரசு ஆண்டது. இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் மத்தியப் பிரதேசத்தை வளர்க்க முடியவில்லை. ஆனால், கடந்த 15 முதல் 16 ஆண்டுகளில் மாநிலத்தை வளர்த்து, உங்கள் முன்பு பா.ஜ.க. ஆட்சி நிருபித்திருக்கிறது” என்றார்.

Tags: Rajnath Singhdefence ministerMadya Pradesh
Share
Tweet
SendShare
Previous Post

இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

Next Post

காங்கிரஸ் “4 சி” பார்முலாவில் செயல்பட்டது: ம.பி.யில் அமித்ஷா தாக்கு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies