அயோத்தியில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை ராமகா பூங்காவிற்கு வருதை தந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது அமைச்சரவை சகாக்களுடன் ஹனுமன்கர்ஹியில் தரிசனம் செய்து பிரார்த்தனை செய்தார். அதைத் தொடர்ந்து, அவர்கள் ஸ்ரீ ராம் ஜென்மபூமி வளாகம் மற்றும் ஸ்ரீ ராம் லாலா விராஜ்மானை வழிபாடு செய்தனர்.
அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திர் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ராம் கதா அருங்காட்சியகத்தில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசியவர், உத்தரபிரதேச வரலாற்றில் இன்று புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் அயோத்தி வந்துள்ளது.அயோத்தியில் 30,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டங்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் 14 முக்கிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. உத்தரபிரதேசத்தில் உள்நாட்டு நீர்வழி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.