தீபாவளி பண்டியையொட்டி, உலக நாடுகள் அனைத்தும் மனதார பாராட்டும் நமது பாரதப் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்குத் தீபாவளி நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பொது மக்கள் புத்தாடை அணிந்தும், இறைவனை மனம் உருக வழிபாடு செய்தும், பாதுகாப்பாகப் பட்டாசுகள் வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, தமிழக மக்கள் அனைவரும், தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிமகிழ்ந்தனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தீபாவளி பண்டிகையையொட்டி புகழ் பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வர் திருக்கோவில், வடபழனி முருகன் திருக்கோவில், பழனி முருகன் திருக்கோவில், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், நெல்லையப்பர் திருக்கோவில், பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில், கோவை மருத மலை திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு திருக்கோவில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
புத்தாடை உடுத்தியும், வரிசையில் சென்றும் பொது மக்கள் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பட்டாசு வெடிக்கத் தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளதால் காலை 6 மணி முதல் 7 மணி வரை பசுமைப் பட்டாசுகளை வெடித்து உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.