காங்கிரஸ் தேர்தலில் தோற்பதற்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது! - பிரதமர் மோடி
Oct 3, 2025, 07:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் தேர்தலில் தோற்பதற்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது! – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Nov 14, 2023, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியின் கவுன்டவுன் தொடங்கிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் 20 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. மீதம் உள்ள 70 தொகுதிகளில் வரும் 17-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து முங்கெலி மாவட்டத்தில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, சத்தீஸ்கரில் மஹாதேவ் சூதாட்ட செயலி மூலம் ரூ.508 கோடி ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் புலனாய்வு அமைப்புகள் கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்துள்ளன. இந்த வழக்கு தொடர்பாக மாநில முதல்வருக்கு மிகவும் நெருக்கமானவர் சிறையில் உள்ளார்.

இதில் முதல்வர் எவ்வளவு பணம் பெற்றார் என்பதை காங்கிரஸ் கட்சி தெரிவிக்க வேண்டும். இதுபோல மற்ற தலைவர்கள் எவ்வளவு பணம் பெற்றார்கள் என்றும் டெல்லிக்கு எவ்வளவு பணம் சென்றது என்றும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் தோற்பதுஉறுதி. அதற்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது. தங்களுடையஆட்சியின் இறுதிகட்டம் நெருங்கிவிட்டது என்பதை காங்கிரஸும் புரிந்து கொண்டுள்ளது.

இந்தத் தேர்தலில் முதல்வரே தனது தொகுதியில் தோல்வி அடைவார் என டெல்லியில் உள்ள சில பத்திரிகையாளர் நண்பர்களும் சில அரசியல் ஆய்வாளர்களும் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி மோடியை வெறுக்கிறது. அவர்கள் மோடி சமுதாயத்தினரையும் கூட வெறுக்கத் தொடங்கி உள்ளனர். கடந்தசில மாதங்களாக, மோடி என்றபெயரில் ஓபிசி சமுதாயத்தினர் மீதுஅவதூறு பரப்பி வருகின்றனர். இதற்காக மன்னிப்பு கோருமாறுநீதிமன்றம் உத்தரவிட்டபோதும் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

பாபா சாஹிப் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்தது. அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர சதி செய்ததும் காங்கிரஸ் கட்சிதான்.

கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, பூபேஷ் பாகெலும் டி.எஸ்.சிங் தியோவும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வராக பதவி வகிப்பார்கள் என ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தவில்லை. பூபேஷ் பாகெல் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்கிறார். தங்கள் கட்சியின் மூத்த தலைவரையே கைவிட்ட காங்கிரஸ் கட்சி மக்களையும் ஏமாற்றிவிட்டது. எனவே, வரும்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு 10 கோடி குடும்பங்களுக்கு அழைப்பு!

Next Post

பிரபல நடிகர் மரணத்தில் மர்மம் – சிபிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Related News

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies