ராஜஸ்தானில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜெ.பி.நட்டா பிரசாரம்!
Mar 15, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜெ.பி.நட்டா பிரசாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 14, 2023, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்கிறார்கள்.

சட்டமன்றத்தின் பதவிகாலம் நிறைவடையவிருக்கும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு இம்மாதம் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, மிசோராம் மாநிலத்துக்கு கடந்த 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல, 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்துக்கு முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதையடுத்து, வரும் 17-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்திலும், 25-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திலும், 30-ம் தேதி தெலங்கானா மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதைத் தொடர்ந்து, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

எனவே, இம்மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வாரம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

அதன்படி, வரும் 15 மற்றும் 18-ம் தேதிகளில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். 15-ம் தேதி பார்மெர் மாவட்டத்தில் உள்ள பெய்டூ என்கிற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். தொடர்ந்து, 18-ம் தேதி பாரத்புர் மற்றும் நகாயுர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

அதேபோல, வரும் 16-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டோங்க் மாவட்டத்தில் உள்ள தியோலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், ராஜ்சாமண்ட் மாவட்டத்தில் உள்ள கும்பல்கார்ஹக், பிம் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் பேசுகிறார். மேலும், 18-ம் தேதி அஜ்மிர் மாவட்டத்தில் நடைபெறும் 3 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

மேலும், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா 16-ம் தேதி தௌசா, ஜோத்பூர் மற்றும் ஜெய்சால்மர் மாவட்டங்களில் பிசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து, ஜெய்ப்பூரில் 16-ம் தேதி பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். இவர்கள் தவிர, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜெய்ப்பூரில் நாளை கட்சித் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.

Tags: PM ModiElectionJ.P.NaddaAmit shaBJP LeadersRajastan
ShareTweetSendShare
Previous Post

லட்சுமி தேவியை பழிப்பதா? நிச்சயம் தண்டிக்கப்படுவான்!

Next Post

அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies