மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம்: அம்பலப்படுத்திய இஸ்ரேல் இராணுவம்!
Jul 25, 2025, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம்: அம்பலப்படுத்திய இஸ்ரேல் இராணுவம்!

ஹமாஸ் தீவிரவாதிகள் நோயாளிகளை கேடயமாகப் பயன்படுத்தும் அவலம்!

Web Desk by Web Desk
Nov 14, 2023, 02:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகள் மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து நோயாளிகளை கேடயமாகப் பயன்படுத்துவதாக, இஸ்ரேல் இராணுவம் வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருக்கிறது.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், மக்கள் கூட்டத்தின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்ட நிலையில், வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. வான்வழி, கடல்வழி, தரைவழி என மும்முனைத் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டிருக்கிறது. இத்தாக்குதலில் சுமார் 10,000 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், 25,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இத்தாக்குதலின்போது ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட முக்கியத் தீவிரவாத முகாம்களையும் இஸ்ரேல் இராணுவம் தரைமட்டமாக்கி இருக்கிறது. அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள் பலரையும் அழித்திருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், ஹமாஸ் தீவிரவாதிகள் திணறி வருகின்றனர்.

இதன் காரணமாக, ஹமாஸ் தீவிரவாதிகள் மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக இஸ்ரேல் இராணுவம் கூறிவருகிறது. வடக்கு காஸாவிலிருந்து தெற்கு பகுதிக்கு இடம்பெயருமாறு காஸா நகர மக்களுக்கு இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை விடுத்தபோதிலும், அவர்களை இடம்பெயர விடாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்து வருகின்றனர்.

அதேபோல, மனிதாபிமான அடிப்படையில் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்பதால், ஹமாஸ் தீவிரவாதிகள் மருத்துவமனைகளுக்கு அடியில் சுரங்கம் அமைத்து, மறைந்திருந்து இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து, மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.

ஆனால், பாலஸ்தீன அரசும், மனிதாபிமான உதவிகள் செய்து வரும் அமைப்புகளும், ஹமாஸ் தீவிரவாதிகளும் இக்குற்றச்சாட்டை மறுத்து வந்தனர். இந்த நிலையில், காஸாவில் உள்ள ரன்டிசி மருத்துவமனையின் அடித்தளத்தில் சுரங்கப்பாதை அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்திருந்தது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கிறது.

6 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், தரைமட்டமாக்கப்பட்ட ஒரு கட்டடத்தில் இருந்த ஒரு சுரங்கப்பாதையை அதிகாரி ஒருவர் கண்டுபிடிக்கிறார். பின்னர், அந்த சுரங்கத்தின் வழியே உள்ளே செல்கிறார். அந்த சுரங்கத்தின் மறுபக்க வழி ரன்டிசி மருத்துவமனையில் திறக்கப்படுகிறது. இதை அந்த அதிகாரி விளக்குகிறார். இதேபோல, காஸா நகரின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையிலும் சுரங்கப்பாதை உள்ளது என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

Tags: VIDEOHamas TerroristKazaSub wayIsrael Army
ShareTweetSendShare
Previous Post

முத்து படம் ரீ ரிலீஸ் – எங்கே ? எப்போது ?

Next Post

சென்னையில் மழை – உதவி எண்கள் அறிவிப்பு!

Related News

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies