மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம்: அம்பலப்படுத்திய இஸ்ரேல் இராணுவம்!
Jun 12, 2026, 05:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம்: அம்பலப்படுத்திய இஸ்ரேல் இராணுவம்!

ஹமாஸ் தீவிரவாதிகள் நோயாளிகளை கேடயமாகப் பயன்படுத்தும் அவலம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 14, 2023, 02:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகள் மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து நோயாளிகளை கேடயமாகப் பயன்படுத்துவதாக, இஸ்ரேல் இராணுவம் வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருக்கிறது.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், மக்கள் கூட்டத்தின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்ட நிலையில், வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. வான்வழி, கடல்வழி, தரைவழி என மும்முனைத் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டிருக்கிறது. இத்தாக்குதலில் சுமார் 10,000 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், 25,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இத்தாக்குதலின்போது ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட முக்கியத் தீவிரவாத முகாம்களையும் இஸ்ரேல் இராணுவம் தரைமட்டமாக்கி இருக்கிறது. அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள் பலரையும் அழித்திருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், ஹமாஸ் தீவிரவாதிகள் திணறி வருகின்றனர்.

இதன் காரணமாக, ஹமாஸ் தீவிரவாதிகள் மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக இஸ்ரேல் இராணுவம் கூறிவருகிறது. வடக்கு காஸாவிலிருந்து தெற்கு பகுதிக்கு இடம்பெயருமாறு காஸா நகர மக்களுக்கு இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை விடுத்தபோதிலும், அவர்களை இடம்பெயர விடாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்து வருகின்றனர்.

அதேபோல, மனிதாபிமான அடிப்படையில் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்பதால், ஹமாஸ் தீவிரவாதிகள் மருத்துவமனைகளுக்கு அடியில் சுரங்கம் அமைத்து, மறைந்திருந்து இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து, மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.

ஆனால், பாலஸ்தீன அரசும், மனிதாபிமான உதவிகள் செய்து வரும் அமைப்புகளும், ஹமாஸ் தீவிரவாதிகளும் இக்குற்றச்சாட்டை மறுத்து வந்தனர். இந்த நிலையில், காஸாவில் உள்ள ரன்டிசி மருத்துவமனையின் அடித்தளத்தில் சுரங்கப்பாதை அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்திருந்தது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கிறது.

6 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், தரைமட்டமாக்கப்பட்ட ஒரு கட்டடத்தில் இருந்த ஒரு சுரங்கப்பாதையை அதிகாரி ஒருவர் கண்டுபிடிக்கிறார். பின்னர், அந்த சுரங்கத்தின் வழியே உள்ளே செல்கிறார். அந்த சுரங்கத்தின் மறுபக்க வழி ரன்டிசி மருத்துவமனையில் திறக்கப்படுகிறது. இதை அந்த அதிகாரி விளக்குகிறார். இதேபோல, காஸா நகரின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையிலும் சுரங்கப்பாதை உள்ளது என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

Tags: Sub wayIsrael ArmyVIDEOHamas TerroristKaza
ShareTweetSendShare
Previous Post

முத்து படம் ரீ ரிலீஸ் – எங்கே ? எப்போது ?

Next Post

சென்னையில் மழை – உதவி எண்கள் அறிவிப்பு!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

ஆசிய கண்டத்தில் இளம் வயதில் சிம்பொனி இசை அமைத்து சாதனை – லிடியன் நாதஸ்வரத்திற்கு உற்சாக வரவேற்பு!

எதற்கும் கவலைப்பட வேண்டாம், மத்திய பாஜக அரசின் முழு ஆதரவு உண்டு – அமித் ஷா

டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படாத மேட்டூர் அணை – விவசாயிகள் வேதனை!

சென்னையில் சரவணபவன் ஹோட்டல் ஊழியர்கள் போராட்டம் – 6 மாதமாக ஊதியம் தரவில்லை என குற்றச்சாட்டு!

டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தல் – பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு!

சென்னை ராமாபுரத்தில் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

கோலாகலமாக தொடங்கியது FIFA உலகக்கோப்பை திருவிழா – முதல் ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு; நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies