மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம்: அம்பலப்படுத்திய இஸ்ரேல் இராணுவம்!
Sep 12, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம்: அம்பலப்படுத்திய இஸ்ரேல் இராணுவம்!

ஹமாஸ் தீவிரவாதிகள் நோயாளிகளை கேடயமாகப் பயன்படுத்தும் அவலம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 14, 2023, 02:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹமாஸ் தீவிரவாதிகள் மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து நோயாளிகளை கேடயமாகப் பயன்படுத்துவதாக, இஸ்ரேல் இராணுவம் வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருக்கிறது.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேல் நாட்டுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், மக்கள் கூட்டத்தின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்ட நிலையில், வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து, இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. வான்வழி, கடல்வழி, தரைவழி என மும்முனைத் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டிருக்கிறது. இத்தாக்குதலில் சுமார் 10,000 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், 25,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இத்தாக்குதலின்போது ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட முக்கியத் தீவிரவாத முகாம்களையும் இஸ்ரேல் இராணுவம் தரைமட்டமாக்கி இருக்கிறது. அதோடு, ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள் பலரையும் அழித்திருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், ஹமாஸ் தீவிரவாதிகள் திணறி வருகின்றனர்.

இதன் காரணமாக, ஹமாஸ் தீவிரவாதிகள் மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக இஸ்ரேல் இராணுவம் கூறிவருகிறது. வடக்கு காஸாவிலிருந்து தெற்கு பகுதிக்கு இடம்பெயருமாறு காஸா நகர மக்களுக்கு இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை விடுத்தபோதிலும், அவர்களை இடம்பெயர விடாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்து வருகின்றனர்.

அதேபோல, மனிதாபிமான அடிப்படையில் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்பதால், ஹமாஸ் தீவிரவாதிகள் மருத்துவமனைகளுக்கு அடியில் சுரங்கம் அமைத்து, மறைந்திருந்து இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து, மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.

ஆனால், பாலஸ்தீன அரசும், மனிதாபிமான உதவிகள் செய்து வரும் அமைப்புகளும், ஹமாஸ் தீவிரவாதிகளும் இக்குற்றச்சாட்டை மறுத்து வந்தனர். இந்த நிலையில், காஸாவில் உள்ள ரன்டிசி மருத்துவமனையின் அடித்தளத்தில் சுரங்கப்பாதை அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்திருந்தது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கிறது.

6 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், தரைமட்டமாக்கப்பட்ட ஒரு கட்டடத்தில் இருந்த ஒரு சுரங்கப்பாதையை அதிகாரி ஒருவர் கண்டுபிடிக்கிறார். பின்னர், அந்த சுரங்கத்தின் வழியே உள்ளே செல்கிறார். அந்த சுரங்கத்தின் மறுபக்க வழி ரன்டிசி மருத்துவமனையில் திறக்கப்படுகிறது. இதை அந்த அதிகாரி விளக்குகிறார். இதேபோல, காஸா நகரின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா மருத்துவமனையிலும் சுரங்கப்பாதை உள்ளது என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.

Tags: VIDEOHamas TerroristKazaSub wayIsrael Army
Share
Tweet
SendShare
Previous Post

முத்து படம் ரீ ரிலீஸ் – எங்கே ? எப்போது ?

Next Post

சென்னையில் மழை – உதவி எண்கள் அறிவிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies