நாட்டின் 4 தூண்கள் எவை? பிரதமர் மோடி புதிய விளக்கம்!
Jun 17, 2025, 09:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் 4 தூண்கள் எவை? பிரதமர் மோடி புதிய விளக்கம்!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை மக்கள் ஆகியோர்தான் நாட்டின் 4 தூண்கள். இந்த 4 தூண்களும் வளர்ச்சி அடையும்போது நாடு வளர்ச்சி அடையும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புதிய விளக்கம் அளித்திருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கு, ராஞ்சியில் அமைந்திருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகம் மற்றும் பிர்சா முண்டா நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

தொடர்ந்து, பி.எம். கிசான் திட்டத்தின் கீழ், 15-வது தவணைத் தொகையாக 2,000 ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 15-வது தவணைத் தொகையை வெளியிட்டார். பின்னர், குந்தி மாவட்டத்தில் நடந்த பேரணியில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “பழங்குடியினரின் பெருமை தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இன்றைய நாள் நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த நாளாகும். பிர்சா முண்டா நினைவுப் பூங்கா மற்றும் சுதந்திரப் போராளிகள் அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

மேலும், இந்த விக்சித் சங்கல்ப் யாத்திரை இன்று தொடங்கி ஜனவரி 26-ம் தேதி வரை நடைபெறும். இந்த யாத்திரை நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும். இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் மத்திய அரசே நேரடியாகச் செல்கிறது. மேலும், இந்த யாத்திரையின்போது ஒவ்வொரு ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட நபரும் அரசு திட்டங்களின் பயனாளிகளாக ஆக்கப்படுவார்கள்.

பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை மக்கள் ஆகியோர்தான் நாட்டின் 4 தூண்கள். இந்த 4 தூண்களும் வளர்ச்சி அடையும்போது நாடும் வளர்ச்சி அடையும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 13 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் பரிசாகக் கிடைத்திருக்கிறது.

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் 13,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது. 15,000 கோடி வரை கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. பல தசாப்தங்களாக சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை பற்றி நம் நாட்டில் நிறைய பேசப்படுகிறது. ஆனால், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எதிரான பாகுபாடுக்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் அகற்றப்படும்போதுதான் உண்மையான மதச்சார்பின்மை வரும்” என்றார்.

Tags: PM ModiJharkhand
ShareTweetSendShare
Previous Post

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாள்! – பிரதமர் மோடி மரியாதை

Next Post

ஜார்க்கண்ட் மாநில நிறுவன தினம்! – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் இறுதிச்சடங்கு – உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி!

TNPSC குரூப்-1 தேர்வில் இந்தி எதிர்ப்பு தொடர்பான கேள்வி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திடலில் அறுபடை வீடுகள் கண்காட்சி – அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்!

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? – நடிகர் சல்மான்கான் விளக்கம்!

கேரளாவில் ஆற்றை கடக்க முடியாமல் தவிக்கும் காட்டு யானைகள்!

ரீல்ஸ் மோகம் – விஷப் பாம்புக்கு முத்தமிட முயன்றவர் மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சைப்ரஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கனடா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

12-ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாடு : இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அசைவு உணவு சாப்பிட்ட விவகாரம் – பாஜக ஆர்பாட்டம்!

மதிமுக அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல்!

தஞ்சையில் விவசாயிகள் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராம் கைது!

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies