இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல்: இந்தியா கடும் எதிர்ப்பு!
Jan 14, 2026, 06:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல்: இந்தியா கடும் எதிர்ப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 17, 2023, 06:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கைக்கு ஷியான் யாங் வாங் -03 என்கிற இன்னொரு உளவுக்கப்பலை அனுப்ப, அந்நாட்டிடம் சீனா அனுமதி கோரியிருக்கிறது. இதற்கு இந்தியத் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சீனா, கடல் ஆராய்ச்சி என்கிற பெயரில் தனது நாட்டு உளவுக் கப்பல்களை அடிக்கடி இலங்கைக்கு அனுப்பி வருகிறது. குறிப்பாக கடந்த 2 வருடங்களாக சீன உளவுக் கப்பல்களின் வருகை அதிகரித்திருக்கிறது. இக்கப்பல்கள் இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதார வளம் பற்றி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படுவதாக சீனா கூறி வருகிறது.

ஆனால், உண்மையில் அக்கப்பல்கள் இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவே அனுப்பப்படுவதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. அதாவது, சீனக் கப்பல்கள் இலங்கை கடல் பகுதியில் நின்றபடியே, தென் மாநிலங்களில் இருக்கும் இந்தியப் படைகள் உள்ளிட்டவற்றை உளவு பார்ப்பதாக  இந்தியா தரப்பில் கூறப்படுகிறது.

இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆகவே, சீனாவின் உளவுக் கப்பலை இலங்கை கடல் பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா தரப்பில் இலங்கை அரசிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது.

ஆனாலும், இலங்கை அரசால் சீனக் கப்பல் வருகையைத் தடுக்க முடியவில்லை. காரணம், சீனாவிடமிருந்து இலங்கை அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகளவில் கடன் பெற்றிருக்கிறது. அதோடு, ஹம்பந்தோடா துறைமுகத்தையும் 99 வருட குத்தகைக்கு இலங்கை அரசுக்கு தாரைவார்த்திருக்கிறது.

அந்த வகையில், சீனாவின் யுவான் வாங் -5 என்கிற உளவுக்கப்பல் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இலங்கைக்கு வந்து, ஹம்பந்தோடா துறைமுகத்தில் ஒரு வாரம் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டு ‘ஷின் யான் – 6’ என்கிற சீனாவின் மற்றொரு உளவுக்கப்பல் கடந்த மாதம் இலங்கைக்கு வந்தது.

இந்தக் கப்பல் கடந்த 2 வாரங்கள் இலங்கையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இலங்கை கடல் பகுதிக்கு வெளியே இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இக்கப்பல் கொழும்பு செல்வதற்காக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், எப்போது சீனா திரும்பும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான், சீனாவில் இருந்து மேலும் ஒரு உளவுக் கப்பல் இலங்கைக்கு வருகிறது. ‘ஷியான் யாங் ஹாங் – 03’ என்கிற பெயர் கொண்ட இக்கப்பல் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது. இக்கப்பலை இலங்கைக்கு அனுப்ப அந்நாட்டிடம் சீனா அனுமதி கோரியிருக்கிறது. இக்கப்பலும் இலங்கை கடற்பரப்பின் பொருளாதார வளத்தை ஆராய்வதற்காகவே வருகிறதாம்.

இக்கப்பல் வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகிறது. ஜனவரி 5-ம் தேதி முதல் பிப்ரவரி 20-ம் தேதி வரை 45 நாட்களுக்கு இக்கப்பல் இலங்கை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு பல்வேறு ஆய்வுகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக சீனத் தரப்பில் கூறப்படுகிறது. இந்த உளவுக் கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சீனக் கப்பல் வருகைக்கு இந்தியா மீண்டும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

மேலும், அக்கப்பல் வருகைக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று இந்தியா சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

Tags: Indiasrilankachina ship
ShareTweetSendShare
Previous Post

தேசிய கல்விக் கொள்கை 2020 கற்றல் மற்றும் திறன் சூழலை மாற்றி வருகிறது!

Next Post

பூஜைக்கு சென்று திரும்பிய இந்துப் பெண்கள் மீது கல்வீசி தாக்குதல்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies