இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல்: இந்தியா கடும் எதிர்ப்பு!
Aug 21, 2025, 02:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல்: இந்தியா கடும் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Nov 17, 2023, 06:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கைக்கு ஷியான் யாங் வாங் -03 என்கிற இன்னொரு உளவுக்கப்பலை அனுப்ப, அந்நாட்டிடம் சீனா அனுமதி கோரியிருக்கிறது. இதற்கு இந்தியத் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சீனா, கடல் ஆராய்ச்சி என்கிற பெயரில் தனது நாட்டு உளவுக் கப்பல்களை அடிக்கடி இலங்கைக்கு அனுப்பி வருகிறது. குறிப்பாக கடந்த 2 வருடங்களாக சீன உளவுக் கப்பல்களின் வருகை அதிகரித்திருக்கிறது. இக்கப்பல்கள் இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதார வளம் பற்றி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படுவதாக சீனா கூறி வருகிறது.

ஆனால், உண்மையில் அக்கப்பல்கள் இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவே அனுப்பப்படுவதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. அதாவது, சீனக் கப்பல்கள் இலங்கை கடல் பகுதியில் நின்றபடியே, தென் மாநிலங்களில் இருக்கும் இந்தியப் படைகள் உள்ளிட்டவற்றை உளவு பார்ப்பதாக  இந்தியா தரப்பில் கூறப்படுகிறது.

இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆகவே, சீனாவின் உளவுக் கப்பலை இலங்கை கடல் பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா தரப்பில் இலங்கை அரசிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது.

ஆனாலும், இலங்கை அரசால் சீனக் கப்பல் வருகையைத் தடுக்க முடியவில்லை. காரணம், சீனாவிடமிருந்து இலங்கை அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகளவில் கடன் பெற்றிருக்கிறது. அதோடு, ஹம்பந்தோடா துறைமுகத்தையும் 99 வருட குத்தகைக்கு இலங்கை அரசுக்கு தாரைவார்த்திருக்கிறது.

அந்த வகையில், சீனாவின் யுவான் வாங் -5 என்கிற உளவுக்கப்பல் கடந்தாண்டு அக்டோபர் மாதம் இலங்கைக்கு வந்து, ஹம்பந்தோடா துறைமுகத்தில் ஒரு வாரம் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டு ‘ஷின் யான் – 6’ என்கிற சீனாவின் மற்றொரு உளவுக்கப்பல் கடந்த மாதம் இலங்கைக்கு வந்தது.

இந்தக் கப்பல் கடந்த 2 வாரங்கள் இலங்கையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இலங்கை கடல் பகுதிக்கு வெளியே இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இக்கப்பல் கொழும்பு செல்வதற்காக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், எப்போது சீனா திரும்பும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான், சீனாவில் இருந்து மேலும் ஒரு உளவுக் கப்பல் இலங்கைக்கு வருகிறது. ‘ஷியான் யாங் ஹாங் – 03’ என்கிற பெயர் கொண்ட இக்கப்பல் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது. இக்கப்பலை இலங்கைக்கு அனுப்ப அந்நாட்டிடம் சீனா அனுமதி கோரியிருக்கிறது. இக்கப்பலும் இலங்கை கடற்பரப்பின் பொருளாதார வளத்தை ஆராய்வதற்காகவே வருகிறதாம்.

இக்கப்பல் வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகிறது. ஜனவரி 5-ம் தேதி முதல் பிப்ரவரி 20-ம் தேதி வரை 45 நாட்களுக்கு இக்கப்பல் இலங்கை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு பல்வேறு ஆய்வுகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக சீனத் தரப்பில் கூறப்படுகிறது. இந்த உளவுக் கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சீனக் கப்பல் வருகைக்கு இந்தியா மீண்டும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

மேலும், அக்கப்பல் வருகைக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று இந்தியா சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

Tags: Indiasrilankachina ship
ShareTweetSendShare
Previous Post

தேசிய கல்விக் கொள்கை 2020 கற்றல் மற்றும் திறன் சூழலை மாற்றி வருகிறது!

Next Post

பூஜைக்கு சென்று திரும்பிய இந்துப் பெண்கள் மீது கல்வீசி தாக்குதல்!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies