ஏகலைவியா பள்ளிகளில் இந்தியா முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும்!
Jul 4, 2025, 11:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏகலைவியா பள்ளிகளில் இந்தியா முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும்!

-குடியரசுத் தலைவர்!

Web Desk by Web Desk
Nov 20, 2023, 08:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியை குடியரசுத்தலைவர் திறந்து வைத்தார்

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர்,

சிறுவயதில் தனது வீட்டிற்கு அருகில் பாடசாலை இல்லை; அதனால் தான் படிப்பிற்காக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தது. அருகில் பள்ளி இல்லாததால் பல குழந்தைகள் அந்த நேரத்தில் கல்வியை இழந்தனர். அப்போதையச் சூழல் இப்போது  இல்லை என்று அவர் கூறினார்.

ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியைத் திறப்பதன் மூலம், உள்ளூர் குழந்தைகளுக்கு இப்போது கல்விக்கான அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பொருளாதார மற்றும் சமூக நல்வாழ்விற்கான திறவுகோல் கல்வி என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

குழந்தைகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், தானும் அவர்களைப் போன்ற எளிய பின்னணியிலிருந்து வந்தவர் என்று கூறினார். தனது கல்வியின் காரணமாக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது என்றும், கல்வி, கற்பவர்களை வெற்றி பெறச் செய்யும் என்று குறிப்பிட்டார்.

படித்தவர்கள் தங்கள் வளர்ச்சியுடன், நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும் என்று தெரிவித்தார்.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு பல்வேறு அமைச்சகங்கள் மூலம் பன்முகத் திட்டங்களை தொடங்கியுள்ளது.

பழங்குடியின குழந்தைகளின் கல்விக்காக நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளிகள் நிறுவப்பட்டு வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தப் பள்ளிகளில் இந்தியா முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும் என்றும், சமூகம் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்று கூறினார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

ஊழல் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: ஜெ.பி.நட்டா!

Next Post

கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies