ஊழல் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: ஜெ.பி.நட்டா!
Sep 14, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: ஜெ.பி.நட்டா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 20, 2023, 07:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு ஏராளமான ஊழல்களை செய்திருக்கிறது, ஊழல் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, ஆளும் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. பா.ஜ.க.வை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “காங்கிரஸ் கட்சி நிலக்கரி ஊழல், சி.டபிள்யூ.ஜி. ஊழல், 2ஜி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், அரிசி ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை செய்தது. வானையும் மண்ணையும் விட்டு வைக்கவில்லை.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் கூறியது. ஆனால், இன்று 19,400 விவசாயிகள் நிலங்களை அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது சகோதரர் மானிய உரத்தை ஏற்றுமதி செய்தார். அவருடைய குடும்பம், 11,000 கோடி ரூபாய்க்கு அரசு ஒப்பந்தங்களை எடுத்து, வீட்டை நிரப்பியது.

மேலும், அசோக் கெலாட் அரசு முதியோர் ஓய்வூதியத்தில் 450 கோடி ரூபாய் ஊழலை செய்திருக்கிறது. ஊழல் சாதனைகளை முறியடிக்கும் நபர்கள் இவர்கள்தான். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் துன்புறுத்தல்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது.

பிரதாப்கர் சம்பவம், சுரு சம்பவம், பில்வாரா சம்பவம், தற்போதுதான் தௌசாவில் நடந்த சம்பவம். இந்த மேடையில் இருந்து பேசக்கூட முடியாத அளவுக்கு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகள் கட்ட பிரதமர் மோடி முடிவு செய்தார்.

இதில், ராஜஸ்தான் மாநிலத்துக்கு 20 லட்சம் வீடுகள் வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், கெலாட் அரசு 9 லட்சம் வீடுகள் கட்ட அனுமதிக்கவில்லை. ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் எங்கள் அரசு 20 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுக்கும்.

நாட்டில் இந்த தீபாவளிக்கு 55 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்தியா 3-வது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறியுள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன்பு மேட் இன் சைனா என மொபைல் போன்களில் எழுதப்பட்டது. ஆனால் இன்று மேட் இன் இந்தியா என்று எழுதப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் கிடைக்கிறது. ஆனால், எங்கள் அரசு அமைந்தால் ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கும். நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுக் கொள்கை தயாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படும். நாங்கள் மோசடி செய்தவர்களை விசாரிப்போம். ஊழல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்” என்றார்.

Tags: RajasthanJ.P.Naddaelection compaign
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரஸை துடைத்தெறிய வேண்டும்: பிரதமர் மோடி ஆவேசம்!

Next Post

ஏகலைவியா பள்ளிகளில் இந்தியா முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies