ஏகலைவியா பள்ளிகளில் இந்தியா முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும்!
Jul 31, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏகலைவியா பள்ளிகளில் இந்தியா முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும்!

-குடியரசுத் தலைவர்!

Murugesan M by Murugesan M
Nov 20, 2023, 08:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியை குடியரசுத்தலைவர் திறந்து வைத்தார்

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர்,

சிறுவயதில் தனது வீட்டிற்கு அருகில் பாடசாலை இல்லை; அதனால் தான் படிப்பிற்காக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தது. அருகில் பள்ளி இல்லாததால் பல குழந்தைகள் அந்த நேரத்தில் கல்வியை இழந்தனர். அப்போதையச் சூழல் இப்போது  இல்லை என்று அவர் கூறினார்.

ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியைத் திறப்பதன் மூலம், உள்ளூர் குழந்தைகளுக்கு இப்போது கல்விக்கான அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பொருளாதார மற்றும் சமூக நல்வாழ்விற்கான திறவுகோல் கல்வி என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

குழந்தைகள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், தானும் அவர்களைப் போன்ற எளிய பின்னணியிலிருந்து வந்தவர் என்று கூறினார். தனது கல்வியின் காரணமாக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது என்றும், கல்வி, கற்பவர்களை வெற்றி பெறச் செய்யும் என்று குறிப்பிட்டார்.

படித்தவர்கள் தங்கள் வளர்ச்சியுடன், நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும் என்று தெரிவித்தார்.

பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலைகள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு பல்வேறு அமைச்சகங்கள் மூலம் பன்முகத் திட்டங்களை தொடங்கியுள்ளது.

பழங்குடியின குழந்தைகளின் கல்விக்காக நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளிகள் நிறுவப்பட்டு வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்தப் பள்ளிகளில் இந்தியா முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும் என்றும், சமூகம் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்று கூறினார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

ஊழல் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: ஜெ.பி.நட்டா!

Next Post

கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies