காங்கிரஸை துடைத்தெறிய வேண்டும்: பிரதமர் மோடி ஆவேசம்!
Jul 29, 2026, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸை துடைத்தெறிய வேண்டும்: பிரதமர் மோடி ஆவேசம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 20, 2023, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளிக்கு பெண்கள் வீடுகளிலுள்ள மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்வதுபோல, காங்கிரஸ் கட்சியை துடைத்தெறிய வேண்டும் என்று கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் ராஜஸ்தானில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பா.ஜ.க. சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா மற்றும் மத்திய அமைச்சர்கள்  ராஜஸ்தானில் முகாமிட்டு தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் அருகேயுள்ள பிலிபங்காவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “2014-ம் ஆண்டுக்கு முன்பு, அதிகாரத்தில் இருப்பவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால், இன்று அந்த நிலை மாறிவிட்டது. 2014-க்கு பிறகு ஏழைகள், மனித இனம் மற்றும் சமுதாய நலனுக்காக அர்ப்பணிப்புடன் பாடுபடுபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஏழைகளிடம் கொள்ளையடித்தவர்கள் தப்பமாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதம் தரவே இன்று நான் இங்கு வந்திருக்கிறேன். ராஜஸ்தானில் ஏழைகளைக் கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. பா.ஜ.க. ஆட்சி நடக்கும் ராஜஸ்தானின் அண்டை மாநிலங்களில் பெட்ரோல் 97 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஆனால், ராஜஸ்தானில் கூடுதலாக 12 முதல் 13 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் தருகிறேன். ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலை மறு ஆய்வு செய்யப்படும். அதேபோல, ராஜஸ்தான் பா.ஜ.க. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி மூலம் விவசாயிகளுக்கு 12,000 வழங்க முடிவு செய்திருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் இடமெல்லாம் ஊழலும், உறவுமுறையும்தான் இருக்கிறது. ராஜஸ்தானில் ஜல் ஜீவன் பணிக்காக மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவிட்டது. ஆனால், அதிலும் காங்கிரஸ் அரசு ஊழல் செய்து உங்களை விஷத் தண்ணீரைக் குடிக்க விட்டு விட்டது.

உங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாத காங்கிரஸுக்கு ஒரு நாள் கூட ஆட்சியில் இருக்க உரிமை உண்டா? தீபாவளி முடிந்துவிட்டது. எங்கள் அம்மாக்கள், சகோதரிகள் வீட்டில் 15 முதல் 16 மணி நேரம் வேலை செய்கிறார்கள். ஆனால், எப்போது தீபாவளி வருகிறதோ அப்போது வீட்டின் மூலை முடுக்குகளை எல்லாம் சுத்தம் செய்கிறார்கள்.

அதேபோல, இந்தத் தேர்தலும் ஜனநாயகத்தின் தீபாவளியாகும். ஆகவே, இந்த தீபாவளி நாளில் இந்த காங்கிரஸ் கட்சியை எந்த மூலையிலும் விட்டுவைக்காத வகையில் துடைத்தெறிய வேண்டும்” என்றார்.

Tags: RajasthanCompaignPM ModiElection
ShareTweetSendShare
Previous Post

நம் அனைவருக்கும் தோள் கொடுக்கப் பிரதமர் மோடி இருக்கிறார் – அண்ணாமலை ட்வீட்

Next Post

ஊழல் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: ஜெ.பி.நட்டா!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies