ஊழல் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: ஜெ.பி.நட்டா!
Sep 30, 2025, 12:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்: ஜெ.பி.நட்டா!

Web Desk by Web Desk
Nov 20, 2023, 07:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு ஏராளமான ஊழல்களை செய்திருக்கிறது, ஊழல் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, ஆளும் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. பா.ஜ.க.வை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “காங்கிரஸ் கட்சி நிலக்கரி ஊழல், சி.டபிள்யூ.ஜி. ஊழல், 2ஜி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், அரிசி ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை செய்தது. வானையும் மண்ணையும் விட்டு வைக்கவில்லை.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் கூறியது. ஆனால், இன்று 19,400 விவசாயிகள் நிலங்களை அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது சகோதரர் மானிய உரத்தை ஏற்றுமதி செய்தார். அவருடைய குடும்பம், 11,000 கோடி ரூபாய்க்கு அரசு ஒப்பந்தங்களை எடுத்து, வீட்டை நிரப்பியது.

மேலும், அசோக் கெலாட் அரசு முதியோர் ஓய்வூதியத்தில் 450 கோடி ரூபாய் ஊழலை செய்திருக்கிறது. ஊழல் சாதனைகளை முறியடிக்கும் நபர்கள் இவர்கள்தான். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் துன்புறுத்தல்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது.

பிரதாப்கர் சம்பவம், சுரு சம்பவம், பில்வாரா சம்பவம், தற்போதுதான் தௌசாவில் நடந்த சம்பவம். இந்த மேடையில் இருந்து பேசக்கூட முடியாத அளவுக்கு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகள் கட்ட பிரதமர் மோடி முடிவு செய்தார்.

இதில், ராஜஸ்தான் மாநிலத்துக்கு 20 லட்சம் வீடுகள் வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், கெலாட் அரசு 9 லட்சம் வீடுகள் கட்ட அனுமதிக்கவில்லை. ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் எங்கள் அரசு 20 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுக்கும்.

நாட்டில் இந்த தீபாவளிக்கு 55 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்தியா 3-வது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறியுள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன்பு மேட் இன் சைனா என மொபைல் போன்களில் எழுதப்பட்டது. ஆனால் இன்று மேட் இன் இந்தியா என்று எழுதப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் கிடைக்கிறது. ஆனால், எங்கள் அரசு அமைந்தால் ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கும். நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுக் கொள்கை தயாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படும். நாங்கள் மோசடி செய்தவர்களை விசாரிப்போம். ஊழல் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்” என்றார்.

Tags: RajasthanJ.P.Naddaelection compaign
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸை துடைத்தெறிய வேண்டும்: பிரதமர் மோடி ஆவேசம்!

Next Post

ஏகலைவியா பள்ளிகளில் இந்தியா முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும்!

Related News

பாகிஸ்தானின் தந்தை இந்தியா தான் – கதறும் பாகிஸ்தானியர்கள்!

‘சாயாவனேஸ்வரர்’ கோயில் தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய தொல்லியல் துறை!

வளர்ச்சி, முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்தை நோக்கமாகக் கொண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு பணியாற்றி வருகிறது – பிரதமர் மோடி

கரூர் சம்பவம் : ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு கோவை வந்தது!

டெல்லியில் புதிததாகக் கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

திருவள்ளூர் : டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருடன் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

எடப்பாடி : கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த மருத்துவர் உட்பட 3-பேர் கைது!

துபாய் : காசோலையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்!

டெல்லி : பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா ஆலோசனை!

தஞ்சை : தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்!

‘தாதாசாகேப் பால்கே’ மோகன்லாலுக்கு அக். 4ல் பாராட்டு விழா!

வேலூர் : போலீசார் கண்முன்னே தாக்கிக் கொண்ட தவெக மற்றும் திமுகவினர்!

திண்டுக்கல் : செல்போன் கடையில் திருட்டு – போலீசார் விசாரணை!

மனு அளித்து 7 ஆண்டுகள் ஆகியும் வீடு கட்டித்தரவில்லை என முதியவர் தர்ணா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவையொட்டி மலர் கண்காட்சி!

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சி பதவியில் இருந்து நீக்கம் – அதிமுக

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies