அலுவலகத்தில் ஜெபக் கூட்டம்: பெண் அதிகாரி சஸ்பெண்ட்!
Aug 15, 2025, 01:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அலுவலகத்தில் ஜெபக் கூட்டம்: பெண் அதிகாரி சஸ்பெண்ட்!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அலுவலகத்தில் தீய சக்திகள் இருப்பதாகக் கூறி, அதை விரட்டுவதற்காக ஜெபக் கூட்டம் நடத்திய பெண் அதிகாரி கேரளாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் கே.ஏ.பிந்து. இவர், மேற்கண்ட அலுவலகத்தில் தீய சக்திகள் இருப்பதாகக் கூறி, கிறிஸ்துவ மத பிரார்த்தனை நிகழ்ச்சியை (ஜெபக் கூட்டம்) நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணியாற்றி சமீபத்தில் ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர், கலெக்டரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, துணை கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிந்துவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

இதுகுறித்து மேற்கண்ட அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் கூறுகையில், “இந்த பிரார்த்தனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.

அலுவலகத்தில் உள்ள தீய சக்திகளை வெளியேற்றுவதற்காக, கிறிஸ்துவ மதத் தலைவர் ஒருவரின் அறிவுரையின்படி, இந்த பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், பிரார்த்தனையின்போது குறிப்பிட்ட சில வாசகங்களை உச்சரித்தால் வேலை நெருக்கடி, மனப்பதற்றம் குறையும் என்று கூறப்பட்டது.

இதன் காரணமாகவே அந்த பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதுவும் அலுவலக வேலை நேரம் முடிந்தது மாலை 5:30 மணிக்குத்தான் பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. இதனால் அலுவல்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி தரப்பு வாதத்தை கேட்காமல் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது” என்றார்கள்.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிந்து கூறுகையில், “நேற்று காலை அலுவலகத்துக்கு வந்ததும் சஸ்பெண்ட் உத்தரவு என்னிடம் தரப்பட்டது. அதில், உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, அலுவலகத்தில் இருந்து வெளியேறினேன்” என்றார்.

Tags: prayersuspendKeralagovt office
ShareTweetSendShare
Previous Post

சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர், டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவு!

Next Post

விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies