அலுவலகத்தில் ஜெபக் கூட்டம்: பெண் அதிகாரி சஸ்பெண்ட்!
Jan 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அலுவலகத்தில் ஜெபக் கூட்டம்: பெண் அதிகாரி சஸ்பெண்ட்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 21, 2023, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அலுவலகத்தில் தீய சக்திகள் இருப்பதாகக் கூறி, அதை விரட்டுவதற்காக ஜெபக் கூட்டம் நடத்திய பெண் அதிகாரி கேரளாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் கே.ஏ.பிந்து. இவர், மேற்கண்ட அலுவலகத்தில் தீய சக்திகள் இருப்பதாகக் கூறி, கிறிஸ்துவ மத பிரார்த்தனை நிகழ்ச்சியை (ஜெபக் கூட்டம்) நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணியாற்றி சமீபத்தில் ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர், கலெக்டரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, துணை கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிந்துவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

இதுகுறித்து மேற்கண்ட அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் கூறுகையில், “இந்த பிரார்த்தனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.

அலுவலகத்தில் உள்ள தீய சக்திகளை வெளியேற்றுவதற்காக, கிறிஸ்துவ மதத் தலைவர் ஒருவரின் அறிவுரையின்படி, இந்த பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும், பிரார்த்தனையின்போது குறிப்பிட்ட சில வாசகங்களை உச்சரித்தால் வேலை நெருக்கடி, மனப்பதற்றம் குறையும் என்று கூறப்பட்டது.

இதன் காரணமாகவே அந்த பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதுவும் அலுவலக வேலை நேரம் முடிந்தது மாலை 5:30 மணிக்குத்தான் பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. இதனால் அலுவல்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி தரப்பு வாதத்தை கேட்காமல் சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது” என்றார்கள்.

இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிந்து கூறுகையில், “நேற்று காலை அலுவலகத்துக்கு வந்ததும் சஸ்பெண்ட் உத்தரவு என்னிடம் தரப்பட்டது. அதில், உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, அலுவலகத்தில் இருந்து வெளியேறினேன்” என்றார்.

Tags: Keralagovt officeprayersuspend
ShareTweetSendShare
Previous Post

சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர், டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவு!

Next Post

விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies