ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி உயிரிழப்பு: நீலகிரியில் நினைவுத்தூண் அமைப்பு!
Oct 3, 2025, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி உயிரிழப்பு: நீலகிரியில் நினைவுத்தூண் அமைப்பு!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேருக்கு, நஞ்சப்பா சத்திரம் கிராமத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நினைவுத்தூணில் பகவத் கீதையின் ‘ஆன்மா அழியாதது’ என்கிற உபதேசம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி கல்லூரியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, முப்படை தளபதி பிபின் ராவத், தனது மனைவி மதுலிகாவுடன் வருகை தந்தார்.

விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர்கள், சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து இராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு புறப்பட்டனர். அவர்களுடன் குரூப் கேப்டன் வருண் சிங் உட்பட 12 இராணுவ அதிகாரிகளும் சென்றனர்.

அந்த ஹெலிகாப்படர் திடீரென சூழ்ந்த மேகக்கூட்டங்கள் காரணமாக, நஞ்சப்பா சத்திரம் என்கிற கிராமத்தில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்து விழுந்து நொறுங்கியது.

இச்சம்பவத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் நினைவாக விபத்து நடந்த இடத்தில் நினைவுத்தூண் அமைக்க வெலிங்டன் இராணுவ மையம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இப்பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், நினைவுத் தூண் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்திருக்கிறது. இந்த நினைவுத் தூண் 2-ம் ஆண்டு நினைவு தினமான வரும் டிசம்பர் 8-ம் தேதி திறக்கப்படவிருக்கிறது.

இந்த நினைவுத் தூணில், ‘ஸ்மிரிதிகா’ என்கிற தலைப்பில், சமஸ்கிருதம், தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பகவத் கீதையின் 2:23 உபதேச வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இதற்குக் கீழே உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேரின் பெயர்களும் எழுதப்பட்டிருக்கிறது. மேலும், ‘ஆன்மா அழியாதது. எந்த ஆயுதத்தாலும் அதை துளைக்க முடியாது. எந்த நெருப்பாலும் அதை அழிக்க முடியாது. தண்ணீராலும் அதை ஈரப்படுத்த முடியாது. காற்றாலும் அதை உலர்த்த முடியாது’ என்கிற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

Tags: MemorialNilgirisHelicopter Crash
ShareTweetSendShare
Previous Post

திருச்சி: பிரபல நகைக்கடைகளில் E.D. அதிகாரிகள் திடீர் சோதனை!

Next Post

தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு – முழு விவரம்!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies