ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி உயிரிழப்பு: நீலகிரியில் நினைவுத்தூண் அமைப்பு!
Aug 18, 2025, 05:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி உயிரிழப்பு: நீலகிரியில் நினைவுத்தூண் அமைப்பு!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேருக்கு, நஞ்சப்பா சத்திரம் கிராமத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நினைவுத்தூணில் பகவத் கீதையின் ‘ஆன்மா அழியாதது’ என்கிற உபதேசம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி கல்லூரியில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, முப்படை தளபதி பிபின் ராவத், தனது மனைவி மதுலிகாவுடன் வருகை தந்தார்.

விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர்கள், சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து இராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரிக்கு புறப்பட்டனர். அவர்களுடன் குரூப் கேப்டன் வருண் சிங் உட்பட 12 இராணுவ அதிகாரிகளும் சென்றனர்.

அந்த ஹெலிகாப்படர் திடீரென சூழ்ந்த மேகக்கூட்டங்கள் காரணமாக, நஞ்சப்பா சத்திரம் என்கிற கிராமத்தில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்து விழுந்து நொறுங்கியது.

இச்சம்பவத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் நினைவாக விபத்து நடந்த இடத்தில் நினைவுத்தூண் அமைக்க வெலிங்டன் இராணுவ மையம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இப்பணிகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், நினைவுத் தூண் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்திருக்கிறது. இந்த நினைவுத் தூண் 2-ம் ஆண்டு நினைவு தினமான வரும் டிசம்பர் 8-ம் தேதி திறக்கப்படவிருக்கிறது.

இந்த நினைவுத் தூணில், ‘ஸ்மிரிதிகா’ என்கிற தலைப்பில், சமஸ்கிருதம், தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பகவத் கீதையின் 2:23 உபதேச வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இதற்குக் கீழே உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேரின் பெயர்களும் எழுதப்பட்டிருக்கிறது. மேலும், ‘ஆன்மா அழியாதது. எந்த ஆயுதத்தாலும் அதை துளைக்க முடியாது. எந்த நெருப்பாலும் அதை அழிக்க முடியாது. தண்ணீராலும் அதை ஈரப்படுத்த முடியாது. காற்றாலும் அதை உலர்த்த முடியாது’ என்கிற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

Tags: MemorialNilgirisHelicopter Crash
ShareTweetSendShare
Previous Post

திருச்சி: பிரபல நகைக்கடைகளில் E.D. அதிகாரிகள் திடீர் சோதனை!

Next Post

தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு – முழு விவரம்!

Related News

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

விசாகப்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் 200 மிமீ மழைப்பொழிவு!

இந்தோனேசியா சுதந்திர தின விழாவில் சிறுவனின் படகு நடனம் வைரல்!

ட்ரம்ப் மனைவிக்கு பதிலளித்த ரஷ்ய மாணவி!

மயிலாடுதுறை : இருசக்கர வாகனம் உரசியதில் நிலை தடுமாறிய சிறுவன்!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை : கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் – இண்டி கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!

ராணிப்பேட்டை : அரசு பேருந்து டயர் வெடித்து விபத்து- 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்!

ஆந்திர மாநிலம் : விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் நீரால் மக்கள் அவதி!

நியூயார்க்கில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

சிக்கந்தர் பட தோல்விக்கு தான் பொறுப்பல்ல : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

10 அடி பள்ளத்தில் விழுந்த இந்தோனேசிய வீரர் மியர்சா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies