அச்சுறுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: மத்திய அமைச்சர் விளக்கம்!
Jul 23, 2025, 03:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அச்சுறுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: மத்திய அமைச்சர் விளக்கம்!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) இந்தியர்களின் பாதுகாப்புக்கும், நம்பிக்கைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், புதிய சட்டத்தை உருவாக்கவும் தயாராக இருக்கிறோம்” என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

கடந்த 17-ம் தேதி டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் நடந்த தீபாவளி மிலன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பம் (AI) மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆகவே, மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், AI-ன் டீப் பேக் மற்றும் தவறான பயன்பாடு குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கூற்று குறித்து, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், “பிரதமர் ஒரு மிக முக்கியமான பிரச்சனையைக் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்.

பிரதமர் சொல்வது மிகவும் சரியானது. இந்திய குடிமக்களுக்கான இந்திய இணையம், டீப் பேக்குகளை அனுமதிக்காததை உறுதிசெய்ய தொழில்துறையினருடன் நாங்கள் இணைந்திருப்போம்.

நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பார்க்க நீங்கள் 24-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். நாங்கள் தொழில்துறையினருடன் பேசுவோம். ஏற்கெனவே இருக்கும் எங்களின் தற்போதைய கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒட்டுமொத்த கட்டமைப்பைக் கொண்டு வருவோம்.

AI என்பது அதிகாரமளித்தல், வளர்ச்சி மற்றும் புதுமைக்கான கருவியாக இருக்கும்போது, ​​இணையத்தில் போலியான தகவல்களை வெளியிட்டு சமூகத்தில் குழப்பத்தையும், சீர்குலைவை ஏற்படுத்தும் நபர்களை நாம் மறந்துவிடக் கூடாது.

AI-யால் வெளியிடப்படும் போலியான தகவல்களால் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு மிக முக்கியமான ஆபத்தாக இருக்கிறது. நாங்கள் ஏற்கெனவே மிகவும் கடினமாக உழைத்து ஏப்ரல் 2023-ல் தகவல் தொழில்நுட்ப விதிகளை உருவாக்கி இருக்கிறோம்.

எனினும், 1.2 பில்லியன் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு சவாலாக இல்லாமல், போலி அல்லது தவறான தகவல்கள் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், புதிய சட்டத்தை உருவாக்கவும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Tags: Central MinisterRajeev ChandrasekharAI technology
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸின் ஒரே நோக்கம் குடும்ப அரசியல்: அமித்ஷா விமர்சனம்!

Next Post

யூடியூப் பார்த்து திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Related News

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை பழக்கங்கள் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இத்தாலி : குகையில் 130 அடி ஆழத்தில் சிக்கிய ஆய்வாளர் மீட்பு!

திமுகவினர் தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ளனர் : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் 

சென்னை : 2வது மாடியில் இருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தை!

தருமபுரி அருகே வீட்டின் மீது அரசு பேருந்து மோதி விபத்து – சிறுமி உயிரிழப்பு!

சீனா : வரவேற்பை பெற்ற சோலார் மின்விசிறி தொப்பிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிக வெள்ளையாக இல்லாததால் பட வாய்ப்பு பறிபோனது – வாணி கபூர்

டிஜிட்டல் உலகில் தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைத்துறை மேம்பட்டுள்ளது : நடிகர் கிங்காங்

மலையாள திரைப்படமான Ronth ஓடிடி தளத்தில் ரிலீஸ்!

சென்னை : தூய்மை பணியாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மனித சங்கிலி போராட்டம்!

ஆர்டிக் பகுதியில் காலநிலை மாற்றம், மாசுபாட்டால் பாதிக்கப்படும் துருவக் கரடிகள்!

உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா!

அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை தமிழகம் 10ம் இடம் – மத்திய அரசு தகவல்!

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைவதை பார்த்து திமுகவுக்கு அச்சம் வந்துவிட்டது : டிடிவி தினகரன்

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies