அச்சுறுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: மத்திய அமைச்சர் விளக்கம்!
Sep 7, 2025, 05:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அச்சுறுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: மத்திய அமைச்சர் விளக்கம்!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) இந்தியர்களின் பாதுகாப்புக்கும், நம்பிக்கைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், புதிய சட்டத்தை உருவாக்கவும் தயாராக இருக்கிறோம்” என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

கடந்த 17-ம் தேதி டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் நடந்த தீபாவளி மிலன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பம் (AI) மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆகவே, மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், AI-ன் டீப் பேக் மற்றும் தவறான பயன்பாடு குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கூற்று குறித்து, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், “பிரதமர் ஒரு மிக முக்கியமான பிரச்சனையைக் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்.

பிரதமர் சொல்வது மிகவும் சரியானது. இந்திய குடிமக்களுக்கான இந்திய இணையம், டீப் பேக்குகளை அனுமதிக்காததை உறுதிசெய்ய தொழில்துறையினருடன் நாங்கள் இணைந்திருப்போம்.

நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பார்க்க நீங்கள் 24-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். நாங்கள் தொழில்துறையினருடன் பேசுவோம். ஏற்கெனவே இருக்கும் எங்களின் தற்போதைய கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒட்டுமொத்த கட்டமைப்பைக் கொண்டு வருவோம்.

AI என்பது அதிகாரமளித்தல், வளர்ச்சி மற்றும் புதுமைக்கான கருவியாக இருக்கும்போது, ​​இணையத்தில் போலியான தகவல்களை வெளியிட்டு சமூகத்தில் குழப்பத்தையும், சீர்குலைவை ஏற்படுத்தும் நபர்களை நாம் மறந்துவிடக் கூடாது.

AI-யால் வெளியிடப்படும் போலியான தகவல்களால் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு மிக முக்கியமான ஆபத்தாக இருக்கிறது. நாங்கள் ஏற்கெனவே மிகவும் கடினமாக உழைத்து ஏப்ரல் 2023-ல் தகவல் தொழில்நுட்ப விதிகளை உருவாக்கி இருக்கிறோம்.

எனினும், 1.2 பில்லியன் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு சவாலாக இல்லாமல், போலி அல்லது தவறான தகவல்கள் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், புதிய சட்டத்தை உருவாக்கவும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Tags: Central MinisterRajeev ChandrasekharAI technology
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸின் ஒரே நோக்கம் குடும்ப அரசியல்: அமித்ஷா விமர்சனம்!

Next Post

யூடியூப் பார்த்து திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Related News

சந்திர கிரகணம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!

வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது காவலர் தாக்குதல் – இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

கயானா தேர்தலில் வெற்றி – அதிபர் இர்ஃபான் அலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உத்தரகாசியில் மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை – கரைபுரண்டு ஓடிய வெள்ளம்!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – இறுதிசுற்றில் இந்தியா!

தெலங்கானா ஆளுநருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு – மாநில நலன் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்!

தொடர் விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்த வருமான வரி சோதனை – பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!

ஆவணி மாத பவுர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

அடுத்த மாதம் சீன அதிபரை சந்திக்க ட்ரம்ப் திட்டம் – வெள்ளை மாளிகை தகவல்!

சந்திர கிரகணம் – வடபழனி முருகன் கோயில் நடை இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies