அச்சுறுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: மத்திய அமைச்சர் விளக்கம்!
Mar 15, 2026, 05:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அச்சுறுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: மத்திய அமைச்சர் விளக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 21, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) இந்தியர்களின் பாதுகாப்புக்கும், நம்பிக்கைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், புதிய சட்டத்தை உருவாக்கவும் தயாராக இருக்கிறோம்” என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

கடந்த 17-ம் தேதி டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் நடந்த தீபாவளி மிலன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பம் (AI) மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆகவே, மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், AI-ன் டீப் பேக் மற்றும் தவறான பயன்பாடு குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கூற்று குறித்து, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், “பிரதமர் ஒரு மிக முக்கியமான பிரச்சனையைக் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்.

பிரதமர் சொல்வது மிகவும் சரியானது. இந்திய குடிமக்களுக்கான இந்திய இணையம், டீப் பேக்குகளை அனுமதிக்காததை உறுதிசெய்ய தொழில்துறையினருடன் நாங்கள் இணைந்திருப்போம்.

நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பார்க்க நீங்கள் 24-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். நாங்கள் தொழில்துறையினருடன் பேசுவோம். ஏற்கெனவே இருக்கும் எங்களின் தற்போதைய கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒட்டுமொத்த கட்டமைப்பைக் கொண்டு வருவோம்.

AI என்பது அதிகாரமளித்தல், வளர்ச்சி மற்றும் புதுமைக்கான கருவியாக இருக்கும்போது, ​​இணையத்தில் போலியான தகவல்களை வெளியிட்டு சமூகத்தில் குழப்பத்தையும், சீர்குலைவை ஏற்படுத்தும் நபர்களை நாம் மறந்துவிடக் கூடாது.

AI-யால் வெளியிடப்படும் போலியான தகவல்களால் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு மிக முக்கியமான ஆபத்தாக இருக்கிறது. நாங்கள் ஏற்கெனவே மிகவும் கடினமாக உழைத்து ஏப்ரல் 2023-ல் தகவல் தொழில்நுட்ப விதிகளை உருவாக்கி இருக்கிறோம்.

எனினும், 1.2 பில்லியன் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு சவாலாக இல்லாமல், போலி அல்லது தவறான தகவல்கள் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், புதிய சட்டத்தை உருவாக்கவும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Tags: Central MinisterRajeev ChandrasekharAI technology
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸின் ஒரே நோக்கம் குடும்ப அரசியல்: அமித்ஷா விமர்சனம்!

Next Post

யூடியூப் பார்த்து திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies