அச்சுறுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: மத்திய அமைச்சர் விளக்கம்!
May 8, 2026, 06:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அச்சுறுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: மத்திய அமைச்சர் விளக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 21, 2023, 05:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) இந்தியர்களின் பாதுகாப்புக்கும், நம்பிக்கைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், புதிய சட்டத்தை உருவாக்கவும் தயாராக இருக்கிறோம்” என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

கடந்த 17-ம் தேதி டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் நடந்த தீபாவளி மிலன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பம் (AI) மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆகவே, மக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், AI-ன் டீப் பேக் மற்றும் தவறான பயன்பாடு குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கூற்று குறித்து, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், “பிரதமர் ஒரு மிக முக்கியமான பிரச்சனையைக் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்.

பிரதமர் சொல்வது மிகவும் சரியானது. இந்திய குடிமக்களுக்கான இந்திய இணையம், டீப் பேக்குகளை அனுமதிக்காததை உறுதிசெய்ய தொழில்துறையினருடன் நாங்கள் இணைந்திருப்போம்.

நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பார்க்க நீங்கள் 24-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். நாங்கள் தொழில்துறையினருடன் பேசுவோம். ஏற்கெனவே இருக்கும் எங்களின் தற்போதைய கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒட்டுமொத்த கட்டமைப்பைக் கொண்டு வருவோம்.

AI என்பது அதிகாரமளித்தல், வளர்ச்சி மற்றும் புதுமைக்கான கருவியாக இருக்கும்போது, ​​இணையத்தில் போலியான தகவல்களை வெளியிட்டு சமூகத்தில் குழப்பத்தையும், சீர்குலைவை ஏற்படுத்தும் நபர்களை நாம் மறந்துவிடக் கூடாது.

AI-யால் வெளியிடப்படும் போலியான தகவல்களால் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு மிக முக்கியமான ஆபத்தாக இருக்கிறது. நாங்கள் ஏற்கெனவே மிகவும் கடினமாக உழைத்து ஏப்ரல் 2023-ல் தகவல் தொழில்நுட்ப விதிகளை உருவாக்கி இருக்கிறோம்.

எனினும், 1.2 பில்லியன் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்கு சவாலாக இல்லாமல், போலி அல்லது தவறான தகவல்கள் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வகையில், புதிய சட்டத்தை உருவாக்கவும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Tags: AI technologyCentral MinisterRajeev Chandrasekhar
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸின் ஒரே நோக்கம் குடும்ப அரசியல்: அமித்ஷா விமர்சனம்!

Next Post

யூடியூப் பார்த்து திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Related News

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!

கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தமிழக ஆளுநருடன் தலைமைச்செயலாளர், டிஜிபி சந்திப்பு – மாநில சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம்!

கட்சி நலன் கருதி என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் – ஸ்டாலின்

தவெக பெரும்பான்மையோடு வந்தால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயார் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

ஆப்ரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் ராஜினாமா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies