அமெரிக்காவில் இந்திய தூதரகம் தாக்குதல்: பஞ்சாப், ஹரியானாவில் என்.ஐ.ஏ. சோதனை!
Jul 5, 2025, 10:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் இந்திய தூதரகம் தாக்குதல்: பஞ்சாப், ஹரியானாவில் என்.ஐ.ஏ. சோதனை!

Web Desk by Web Desk
Nov 22, 2023, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் இந்திய தூதரக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி, காலிஸ்தான் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருக்கும் காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர்கள், இந்தியாவில் இருக்கும் சீக்கியர்களை தூண்டி விட்டு வருகிறார்கள்.

மேலும், அந்நாடுகளில் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதோடு, இந்தியத் தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் மீது கடந்த மார்ச் 19 மற்றும் ஜூலை 2-ம் தேதிகளில் தாக்குதல் நடத்தி தீவைக்கப்பட்டது.

இது தவிர, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டப்பட்டிருந்த இந்தியக் கொடி கீழே இறக்கி அவமதிக்கப்பட்டது. இதனிடையே, காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர், கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சூழலில், நீதிக்கான சீக்கியர்கள் சங்கத்தின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், ஏர் இந்தியா விமானத்தில் நவம்பர் 19-ம் தேதி சீக்கியர்கள் யாரும் பயணிக்க வேண்டும். ஆபத்து காத்திருக்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இது தொடர்பாக, குர்பத்வந்த் சிங் பன்னூன் மீது என்.ஐ.ஏ. வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில், இந்திய தூதரகம் தாக்கப்பட்டது குறித்து என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 14 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த வகையில், பஞ்சாப் மாநிலம் மோகா, ஜலந்தர், லூதியானா, குருதாஸ்பூர், மொகாலி மற்றும் பாட்டியாலாவிலும், ஹரியானா மாநிலம் குருஷேத்திரா மற்றும் யமுனா நகரிலும் தடை செய்யப்பட்ட நீதிக்கான சீக்கியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Tags: NiaHaryanapunjab
ShareTweetSendShare
Previous Post

பிணைக் கைதிகள் விடுதலை: பிரதமர் மோடி வரவேற்பு!

Next Post

தேசிய ஹாக்கி : கேரளா-ராஜஸ்தான் : சமநிலையில் முடிவு!

Related News

இன்றைய தங்கம் விலை!

சிவகங்கை அருகே தனியார் பள்ளி மாணவன் மர்மான முறையில் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

அர்ஜென்டினா சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

மணிப்பூரில் காவல்துறை அதிரடி சோதனை – ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்!

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை!

செங்கல்பட்டு அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ குட்கா பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

பரமக்குடி அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழா!

விருதுநகர் அருகே100 நாள் வேலை திட்ட‌ பணியாளர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக குற்றச்சாட்டு!

திருச்சி தாளக்குடி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு திண்டுக்கல் அணி முன்னேற்றம்!

டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் தொடர்மழை!

திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டி – மேலாளர் மூலம் காவல்துறையில் ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

முசிறி புதிய பேருந்து நிலைய மேற்கூரை சேதம் – பயணிகள் அச்சம்!

அரக்கோணத்தில் இரவில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் – போலீசார் விசாரணை!

வாலாஜாபேட்டை அருகே திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா கோலாகலம்!

சத்தியமங்கலம் அருகே கோயில் பூட்டை உடைத்து வழிபாடு நடத்திய மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies