அமெரிக்காவில் இந்திய தூதரகம் தாக்குதல்: பஞ்சாப், ஹரியானாவில் என்.ஐ.ஏ. சோதனை!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் இந்திய தூதரகம் தாக்குதல்: பஞ்சாப், ஹரியானாவில் என்.ஐ.ஏ. சோதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 22, 2023, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் இந்திய தூதரக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி, காலிஸ்தான் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருக்கும் காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர்கள், இந்தியாவில் இருக்கும் சீக்கியர்களை தூண்டி விட்டு வருகிறார்கள்.

மேலும், அந்நாடுகளில் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதோடு, இந்தியத் தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் மீது கடந்த மார்ச் 19 மற்றும் ஜூலை 2-ம் தேதிகளில் தாக்குதல் நடத்தி தீவைக்கப்பட்டது.

இது தவிர, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டப்பட்டிருந்த இந்தியக் கொடி கீழே இறக்கி அவமதிக்கப்பட்டது. இதனிடையே, காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர், கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சூழலில், நீதிக்கான சீக்கியர்கள் சங்கத்தின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், ஏர் இந்தியா விமானத்தில் நவம்பர் 19-ம் தேதி சீக்கியர்கள் யாரும் பயணிக்க வேண்டும். ஆபத்து காத்திருக்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இது தொடர்பாக, குர்பத்வந்த் சிங் பன்னூன் மீது என்.ஐ.ஏ. வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில், இந்திய தூதரகம் தாக்கப்பட்டது குறித்து என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 14 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த வகையில், பஞ்சாப் மாநிலம் மோகா, ஜலந்தர், லூதியானா, குருதாஸ்பூர், மொகாலி மற்றும் பாட்டியாலாவிலும், ஹரியானா மாநிலம் குருஷேத்திரா மற்றும் யமுனா நகரிலும் தடை செய்யப்பட்ட நீதிக்கான சீக்கியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Tags: punjabNiaHaryana
ShareTweetSendShare
Previous Post

பிணைக் கைதிகள் விடுதலை: பிரதமர் மோடி வரவேற்பு!

Next Post

தேசிய ஹாக்கி : கேரளா-ராஜஸ்தான் : சமநிலையில் முடிவு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies