அமெரிக்காவில் இந்திய தூதரகம் தாக்குதல்: பஞ்சாப், ஹரியானாவில் என்.ஐ.ஏ. சோதனை!
Jul 29, 2026, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் இந்திய தூதரகம் தாக்குதல்: பஞ்சாப், ஹரியானாவில் என்.ஐ.ஏ. சோதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 22, 2023, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் இந்திய தூதரக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி, காலிஸ்தான் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருக்கும் காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர்கள், இந்தியாவில் இருக்கும் சீக்கியர்களை தூண்டி விட்டு வருகிறார்கள்.

மேலும், அந்நாடுகளில் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதோடு, இந்தியத் தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் மீது கடந்த மார்ச் 19 மற்றும் ஜூலை 2-ம் தேதிகளில் தாக்குதல் நடத்தி தீவைக்கப்பட்டது.

இது தவிர, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டப்பட்டிருந்த இந்தியக் கொடி கீழே இறக்கி அவமதிக்கப்பட்டது. இதனிடையே, காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர், கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சூழலில், நீதிக்கான சீக்கியர்கள் சங்கத்தின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், ஏர் இந்தியா விமானத்தில் நவம்பர் 19-ம் தேதி சீக்கியர்கள் யாரும் பயணிக்க வேண்டும். ஆபத்து காத்திருக்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இது தொடர்பாக, குர்பத்வந்த் சிங் பன்னூன் மீது என்.ஐ.ஏ. வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில், இந்திய தூதரகம் தாக்கப்பட்டது குறித்து என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 14 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த வகையில், பஞ்சாப் மாநிலம் மோகா, ஜலந்தர், லூதியானா, குருதாஸ்பூர், மொகாலி மற்றும் பாட்டியாலாவிலும், ஹரியானா மாநிலம் குருஷேத்திரா மற்றும் யமுனா நகரிலும் தடை செய்யப்பட்ட நீதிக்கான சீக்கியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Tags: NiaHaryanapunjab
ShareTweetSendShare
Previous Post

பிணைக் கைதிகள் விடுதலை: பிரதமர் மோடி வரவேற்பு!

Next Post

தேசிய ஹாக்கி : கேரளா-ராஜஸ்தான் : சமநிலையில் முடிவு!

Related News

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies