அமெரிக்காவில் இந்திய தூதரகம் தாக்குதல்: பஞ்சாப், ஹரியானாவில் என்.ஐ.ஏ. சோதனை!
Sep 13, 2026, 02:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் இந்திய தூதரகம் தாக்குதல்: பஞ்சாப், ஹரியானாவில் என்.ஐ.ஏ. சோதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 22, 2023, 07:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் இந்திய தூதரக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி, காலிஸ்தான் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருக்கும் காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர்கள், இந்தியாவில் இருக்கும் சீக்கியர்களை தூண்டி விட்டு வருகிறார்கள்.

மேலும், அந்நாடுகளில் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவதோடு, இந்தியத் தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் மீது கடந்த மார்ச் 19 மற்றும் ஜூலை 2-ம் தேதிகளில் தாக்குதல் நடத்தி தீவைக்கப்பட்டது.

இது தவிர, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டப்பட்டிருந்த இந்தியக் கொடி கீழே இறக்கி அவமதிக்கப்பட்டது. இதனிடையே, காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர், கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சூழலில், நீதிக்கான சீக்கியர்கள் சங்கத்தின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன், சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், ஏர் இந்தியா விமானத்தில் நவம்பர் 19-ம் தேதி சீக்கியர்கள் யாரும் பயணிக்க வேண்டும். ஆபத்து காத்திருக்கிறது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இது தொடர்பாக, குர்பத்வந்த் சிங் பன்னூன் மீது என்.ஐ.ஏ. வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில், இந்திய தூதரகம் தாக்கப்பட்டது குறித்து என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 14 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த வகையில், பஞ்சாப் மாநிலம் மோகா, ஜலந்தர், லூதியானா, குருதாஸ்பூர், மொகாலி மற்றும் பாட்டியாலாவிலும், ஹரியானா மாநிலம் குருஷேத்திரா மற்றும் யமுனா நகரிலும் தடை செய்யப்பட்ட நீதிக்கான சீக்கியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Tags: NiaHaryanapunjab
Share
Tweet
SendShare
Previous Post

பிணைக் கைதிகள் விடுதலை: பிரதமர் மோடி வரவேற்பு!

Next Post

தேசிய ஹாக்கி : கேரளா-ராஜஸ்தான் : சமநிலையில் முடிவு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies