டீப் ஃபேக் வீடியோ: சமூக வலைத்தளங்களுக்கு 7 நாள் கெடு!
Oct 3, 2025, 09:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டீப் ஃபேக் வீடியோ: சமூக வலைத்தளங்களுக்கு 7 நாள் கெடு!

Web Desk by Web Desk
Nov 24, 2023, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டீப் ஃபேக் வீடியோக்கள் தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டிருப்பதாகவும், டீப் ஃபேக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தனி அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி வீடியோக்கள் மற்றும் தகவல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பிரபல நடிகைகள் கஜோல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் குறித்த ஆபாச போலி வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, டீப் ஃபேக் வீடியோக்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கவலை தெரிவித்தனர். மேலும், போலி வீடியோக்கள் தொடர்பாக நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தி இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, சமூக வலைத்தள நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, டீப் ஃபேக் வீடியோக்களுக்கு எதிராக விரைவில் சட்டம் இயற்றப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், போலி வீடியோக்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களுக்கு 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டிருப்பதாகவும், நடவடிக்கை எடுக்க தனி அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், “சமூக வலைத்தளங்களால் தகவல் தொழில்நுட்ப விதிகள் மீறப்படுவது குறித்து பயனர்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணையதளம் ஒன்றை உருவாக்கும்.

ஐ.டி. விதிகளை மீறுவது குறித்து பயனர்களுக்கு தெரிவிக்கவும், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செய்யும். மேலும், டீப் ஃபேக் புகைப்படத்தை வெளியிட்ட நபரை கண்டுபிடித்த உடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதை கண்காணிக்க தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு ஏற்ப விதிகளை மாற்றியமைக்க சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு 7 நாட்கள் கெடு வழங்கப்படுகிறது. இன்று முதல் தகவல் தொழில்நுட்ப சட்டங்களை மீறுவதை பொறுத்துக் கொள்ள முடியாது” என்று கூறியிருக்கிறார்.

Tags: Central MinisterDeep Fake VideoRajeev chandrasekar
ShareTweetSendShare
Previous Post

இந்திய பாரா விளையாட்டுப் போட்டி – டிச.10 ஆம் தேதி தொடக்கம் !

Next Post

கூட்டுறவு வங்கி மோசடி: மாஜி தலைவர் மகனுடன் கைது!

Related News

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies