டீப் ஃபேக் வீடியோ: சமூக வலைத்தளங்களுக்கு 7 நாள் கெடு!
Jan 14, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டீப் ஃபேக் வீடியோ: சமூக வலைத்தளங்களுக்கு 7 நாள் கெடு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டீப் ஃபேக் வீடியோக்கள் தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டிருப்பதாகவும், டீப் ஃபேக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தனி அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி வீடியோக்கள் மற்றும் தகவல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பிரபல நடிகைகள் கஜோல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் குறித்த ஆபாச போலி வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, டீப் ஃபேக் வீடியோக்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கவலை தெரிவித்தனர். மேலும், போலி வீடியோக்கள் தொடர்பாக நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தி இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, சமூக வலைத்தள நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, டீப் ஃபேக் வீடியோக்களுக்கு எதிராக விரைவில் சட்டம் இயற்றப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், போலி வீடியோக்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களுக்கு 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டிருப்பதாகவும், நடவடிக்கை எடுக்க தனி அதிகாரி நியமிக்கப்படுவார் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், “சமூக வலைத்தளங்களால் தகவல் தொழில்நுட்ப விதிகள் மீறப்படுவது குறித்து பயனர்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணையதளம் ஒன்றை உருவாக்கும்.

ஐ.டி. விதிகளை மீறுவது குறித்து பயனர்களுக்கு தெரிவிக்கவும், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதில் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செய்யும். மேலும், டீப் ஃபேக் புகைப்படத்தை வெளியிட்ட நபரை கண்டுபிடித்த உடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதை கண்காணிக்க தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு ஏற்ப விதிகளை மாற்றியமைக்க சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு 7 நாட்கள் கெடு வழங்கப்படுகிறது. இன்று முதல் தகவல் தொழில்நுட்ப சட்டங்களை மீறுவதை பொறுத்துக் கொள்ள முடியாது” என்று கூறியிருக்கிறார்.

Tags: Deep Fake VideoRajeev chandrasekarCentral Minister
ShareTweetSendShare
Previous Post

இந்திய பாரா விளையாட்டுப் போட்டி – டிச.10 ஆம் தேதி தொடக்கம் !

Next Post

கூட்டுறவு வங்கி மோசடி: மாஜி தலைவர் மகனுடன் கைது!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies