திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி!
Oct 22, 2025, 01:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Nov 26, 2023, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று திருப்பதிக்கு வருகை தருகிறார். அங்கு, ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, பின்னர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதையடுத்து, இம்மாநிலத்துக்கு வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தீவிர முனைப்புக்காட்டி வருகின்றனர். இதனால், இம்மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. எனவே, பா.ஜ.க. தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார். இந்த சூழலில், இன்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளும் பிரதமர் மோடி, மாலை திருப்பதிக்கு வருகிறார்.

தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கவர்னர் அப்துல் நசீர், கலெக்டர் வெங்கட் ரமணா ரெட்டி, போலீஸ் எஸ்.பி. பரமேஸ்வர் ரெட்டி மற்றும் அமைச்சர்கள், வி.வி.ஐ.பி.க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கின்றனர்.

தொடர்ந்து, சாலை மார்க்கமாக திருமலைக்கு வரும் பிரதமர் மோடி, அங்குள்ள வி.ஐ.பி. விருந்தினர் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர், நாளை காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, பிறகு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, மத்திய, மாநில உளவுத்துறை போலீஸாரும், மத்திய பாதுகாப்புப் படை போலீஸாரும் ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் ரேணிகுண்டாவில் இருந்து திருமலை செல்லும் சாலைகள் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

மேலும், பிரதமர் மோடி தங்கவிருக்கும் வி.ஐ.பி. விருந்தினர் மாளிகை முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதோடு, ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Tags: PM ModiThirupathi Temple
ShareTweetSendShare
Previous Post

அரசு அலுவலர்களை விசாரணைக்கு அழைத்தால் பதறுவது ஏன்?

Next Post

விஜய் ஹசாரே கிரிக்கெட் : தமிழக அணி அபார வெற்றி !

Related News

எல்லையில் ஊடுருவ காத்துள்ள பயங்கரவாதிகள் – ராணுவம் கண்காணிப்பு!

திருவள்ளூர் : புயல் காற்றில் சிக்கி வேருடன் சாய்ந்த ராட்சத மரங்கள்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் – கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்!

ராமநாதபுரம் : வீடுகளுக்குள் மழைநீர் – மொட்டை மாடிகளில் மக்கள் தஞ்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரிய லோக்பால்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

மணிப்பூர் : வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது நிங்கோல் சகோபா திருவிழா!

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies