திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி!
Mar 15, 2026, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 26, 2023, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று திருப்பதிக்கு வருகை தருகிறார். அங்கு, ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, பின்னர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதையடுத்து, இம்மாநிலத்துக்கு வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தீவிர முனைப்புக்காட்டி வருகின்றனர். இதனால், இம்மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. எனவே, பா.ஜ.க. தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார். இந்த சூழலில், இன்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளும் பிரதமர் மோடி, மாலை திருப்பதிக்கு வருகிறார்.

தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கவர்னர் அப்துல் நசீர், கலெக்டர் வெங்கட் ரமணா ரெட்டி, போலீஸ் எஸ்.பி. பரமேஸ்வர் ரெட்டி மற்றும் அமைச்சர்கள், வி.வி.ஐ.பி.க்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கின்றனர்.

தொடர்ந்து, சாலை மார்க்கமாக திருமலைக்கு வரும் பிரதமர் மோடி, அங்குள்ள வி.ஐ.பி. விருந்தினர் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர், நாளை காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, பிறகு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, மத்திய, மாநில உளவுத்துறை போலீஸாரும், மத்திய பாதுகாப்புப் படை போலீஸாரும் ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் ரேணிகுண்டாவில் இருந்து திருமலை செல்லும் சாலைகள் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

மேலும், பிரதமர் மோடி தங்கவிருக்கும் வி.ஐ.பி. விருந்தினர் மாளிகை முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதோடு, ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Tags: PM ModiThirupathi Temple
ShareTweetSendShare
Previous Post

அரசு அலுவலர்களை விசாரணைக்கு அழைத்தால் பதறுவது ஏன்?

Next Post

விஜய் ஹசாரே கிரிக்கெட் : தமிழக அணி அபார வெற்றி !

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies