சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ்!
Oct 1, 2025, 07:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ்!

Web Desk by Web Desk
Nov 26, 2023, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சொத்துக் குவிப்பு வழக்கில், ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பதிலளிக்கும்படி, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கி, சட்டவிரோதமாக 40,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதோடு, அதே அளவுக்கு அரசு கருவூலத்துக்கு இழப்பை ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, கடந்த 2012-ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக சி.பி.ஐ. தரப்பில் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் 11 குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டன. எனினும், இவ்வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி ஜாமீன் வாங்கி இருக்கிறார்.

இந்த சூழலில், ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவரது கட்சியைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா் ரகு ராமகிருஷ்ண ராஜுக்கும் இடையே நீண்ட காலமாகக் கருத்து முரண்பாடு நிலவுகிறது.

இந்த நிலயைில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக ரகு ராமகிருஷ்ண ராஜு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், “கடந்த 2012-ம் ஆண்டு ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக நீதிமன்றத்தில் 11 குற்றப்பத்திரிகைகளை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. ஜெகன் தனது பல்வேறு நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 40,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறார்.

மேலும், அதே அளவுக்கு அரசு கருவூலத்துக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார். எனினும், இந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை, எந்தவொரு முன்னேற்றமோ, நடவடிக்கையோ இல்லாமல் ஜெகன் மோகன் ரெட்டியால் முடங்கிக் கிடக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், வழக்கு விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதில் சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் ஆா்வம் காட்டவில்லை. ஆகவே, இந்த வழக்கில் ஜெகனுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருக்கிறார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபே எஸ்.ஓகா, பங்கஜ் மிட்டல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனு தொடா்பாக பதிலளிக்கும்படி ஜெகன்மோகனுக்கும், சி.பி.ஐ.க்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

Tags: supreme courtAndra CMJegan Mohan Reddy
ShareTweetSendShare
Previous Post

மாற்றுத்திறனாளி பெண்ணிடம் வீரம் காட்டி அரசு அதிகாரி சஸ்பெண்ட்!

Next Post

கார்த்திகைத் தீபத் திருநாளில் மாவலி!

Related News

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து – மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு!

MMMN டீசர் நாளை வெளியாகிறது – படக்குழு!

சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கட்டண குறைப்பு அமலுக்கு வந்தது!

காந்தாரா சாப்டர்-1 ன் பாடல் வீடியோ ரிலீஸ்!

தொடர் விடுமுறை : கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

நகை பட்டறை ஊழியரிடம் நூதன முறையில் 80 கிராம் நகைகள் கொள்ளை!

மடகாஸ்கர் : மாணவர் போராட்டம் எதிரொலி – ஆட்சி கலைப்பு!

உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் : 4கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்தும் நிற்கும் வாகனங்கள்!

ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் தேவை – சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

நடிகை டிம்பிள் ஹயாத்தி, கணவர் மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies