சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ்!
Aug 7, 2026, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 26, 2023, 03:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சொத்துக் குவிப்பு வழக்கில், ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பதிலளிக்கும்படி, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி, பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கி, சட்டவிரோதமாக 40,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதோடு, அதே அளவுக்கு அரசு கருவூலத்துக்கு இழப்பை ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, கடந்த 2012-ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக சி.பி.ஐ. தரப்பில் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் 11 குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டன. எனினும், இவ்வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி ஜாமீன் வாங்கி இருக்கிறார்.

இந்த சூழலில், ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவரது கட்சியைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா் ரகு ராமகிருஷ்ண ராஜுக்கும் இடையே நீண்ட காலமாகக் கருத்து முரண்பாடு நிலவுகிறது.

இந்த நிலயைில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக ரகு ராமகிருஷ்ண ராஜு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், “கடந்த 2012-ம் ஆண்டு ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக நீதிமன்றத்தில் 11 குற்றப்பத்திரிகைகளை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. ஜெகன் தனது பல்வேறு நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 40,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறார்.

மேலும், அதே அளவுக்கு அரசு கருவூலத்துக்கு இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார். எனினும், இந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை, எந்தவொரு முன்னேற்றமோ, நடவடிக்கையோ இல்லாமல் ஜெகன் மோகன் ரெட்டியால் முடங்கிக் கிடக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், வழக்கு விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதில் சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் ஆா்வம் காட்டவில்லை. ஆகவே, இந்த வழக்கில் ஜெகனுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருக்கிறார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபே எஸ்.ஓகா, பங்கஜ் மிட்டல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனு தொடா்பாக பதிலளிக்கும்படி ஜெகன்மோகனுக்கும், சி.பி.ஐ.க்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

Tags: supreme courtAndra CMJegan Mohan Reddy
Share
Tweet
SendShare
Previous Post

மாற்றுத்திறனாளி பெண்ணிடம் வீரம் காட்டி அரசு அதிகாரி சஸ்பெண்ட்!

Next Post

கார்த்திகைத் தீபத் திருநாளில் மாவலி!

Related News

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies