பாகிஸ்தான் ஆதரவு கோஷம்: காஷ்மீர் பல்கலை. மாணவர்கள் மீது பாய்ந்தது உ.பா. சட்டம்!
Sep 9, 2025, 04:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் ஆதரவு கோஷம்: காஷ்மீர் பல்கலை. மாணவர்கள் மீது பாய்ந்தது உ.பா. சட்டம்!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பிய காஷ்மீர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் மீது கந்தர்பால் காவல்துறை உ.பா. சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

இதனால், இந்திய அணியினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே கலங்கிப்போய் கண்ணீர் சிந்தினர். போட்டி நடைபெற்ற மைதானத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இந்திய அணி வீரர்கள் உடை மாற்றும் அறைக்கே சென்று ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், மத்திய காஷ்மீர் கந்தர்பாலின் ஷுஹாமாவில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கால்நடை அறிவியல் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர்.

போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததும், லோக்கல் மாணவர்கள் சிலர் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பி இருக்கிறார்கள். மேலும், இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசிய மாணவர் ஒருவரை தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள்.

இதையடுத்து, மேற்கண்ட மாணவர் கந்தர்பால் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனடிப்படையில், காஷ்மீர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்களை கந்தர்பால் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அம்மாணவர்கள் மீது உ.பா. சட்டம் பாய்ந்திருக்கிறது.

இதுகுறித்து கந்தர்பால் காவல்துறையினர் கூறுகையில், “இது பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்புவது மட்டுமல்ல. முழக்கமிடப்பட்ட முழு சூழலைப் பற்றியது. இந்த முழக்கங்கள், ஒரு அசாதாரணத்தை இயல்பாக்குவது பற்றியது. இந்த அசாதாரணமான மற்றும் தவறான விஷயம் பெரும்பாலும் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத வலைப்பின்னல்களின் பின்னணியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இது கருத்து வேறுபாடு அல்லது கருத்து சுதந்திரம் பற்றியது அல்ல. இதற்கு ஆதாரமாக எழுத்துப்பூர்வ புகார்கள் உள்ளன. மேலும், இது உ.பா. சட்டப் பிரிவு 13-ன் படி பிரிவினைவாத சித்தாந்தத்தை தூண்டுவது, ஆதரிப்பது மற்றும் ஊக்குவிப்பது பற்றியது. இது போன்ற செயல்களை சட்டவிரோதமானது என்று வகைப்படுத்துகிறது” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: CricketWorld Cupjammu kashmirStudents arrest
ShareTweetSendShare
Previous Post

பூங்கா பராமரிப்பு ரூ.4.59 கோடிக்கு ஒப்பந்தம் – மெட்ரோ இரயில்வே அறிவிப்பு!

Next Post

கார்த்திகை நாளில் படுகர் இனமக்கள் பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர்!

Related News

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies