பாகிஸ்தான் ஆதரவு கோஷம்: காஷ்மீர் பல்கலை. மாணவர்கள் மீது பாய்ந்தது உ.பா. சட்டம்!
Jul 29, 2026, 07:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் ஆதரவு கோஷம்: காஷ்மீர் பல்கலை. மாணவர்கள் மீது பாய்ந்தது உ.பா. சட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 28, 2023, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பிய காஷ்மீர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் மீது கந்தர்பால் காவல்துறை உ.பா. சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

இதனால், இந்திய அணியினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே கலங்கிப்போய் கண்ணீர் சிந்தினர். போட்டி நடைபெற்ற மைதானத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இந்திய அணி வீரர்கள் உடை மாற்றும் அறைக்கே சென்று ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், மத்திய காஷ்மீர் கந்தர்பாலின் ஷுஹாமாவில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கால்நடை அறிவியல் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர்.

போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததும், லோக்கல் மாணவர்கள் சிலர் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பி இருக்கிறார்கள். மேலும், இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசிய மாணவர் ஒருவரை தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள்.

இதையடுத்து, மேற்கண்ட மாணவர் கந்தர்பால் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனடிப்படையில், காஷ்மீர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்களை கந்தர்பால் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அம்மாணவர்கள் மீது உ.பா. சட்டம் பாய்ந்திருக்கிறது.

இதுகுறித்து கந்தர்பால் காவல்துறையினர் கூறுகையில், “இது பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்புவது மட்டுமல்ல. முழக்கமிடப்பட்ட முழு சூழலைப் பற்றியது. இந்த முழக்கங்கள், ஒரு அசாதாரணத்தை இயல்பாக்குவது பற்றியது. இந்த அசாதாரணமான மற்றும் தவறான விஷயம் பெரும்பாலும் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத வலைப்பின்னல்களின் பின்னணியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இது கருத்து வேறுபாடு அல்லது கருத்து சுதந்திரம் பற்றியது அல்ல. இதற்கு ஆதாரமாக எழுத்துப்பூர்வ புகார்கள் உள்ளன. மேலும், இது உ.பா. சட்டப் பிரிவு 13-ன் படி பிரிவினைவாத சித்தாந்தத்தை தூண்டுவது, ஆதரிப்பது மற்றும் ஊக்குவிப்பது பற்றியது. இது போன்ற செயல்களை சட்டவிரோதமானது என்று வகைப்படுத்துகிறது” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Tags: CricketWorld Cupjammu kashmirStudents arrest
ShareTweetSendShare
Previous Post

பூங்கா பராமரிப்பு ரூ.4.59 கோடிக்கு ஒப்பந்தம் – மெட்ரோ இரயில்வே அறிவிப்பு!

Next Post

கார்த்திகை நாளில் படுகர் இனமக்கள் பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies