ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்: தெற்கு இரயில்வே முக்கிய அறிவிப்பு!
Sep 9, 2025, 03:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்: தெற்கு இரயில்வே முக்கிய அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 06:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தென்னக இரயில்வே சார்பில், காரைக்குடியில் இருந்து விருதுநகர், இராஜபாளையம் வழியாக, எர்ணாகுளத்துக்குச் சிறப்பு இரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை தினங்கள், வார விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்புத் தினங்களில் பயணிகளின் நலனுக்காக தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து சபரிமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம்.

இதனை அடுத்து சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக,
முதன்முறையாக காரைக்குடியில் இருந்து விருதுநகர், இராஜபாளையம் வழியாக எர்ணாகுளத்திற்குச் சிறப்பு கட்டண இரயில் இயக்கப்படுவதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

வருகிற 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 28-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும் சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது.

இந்த இரயில் (வண்டி எண் – 06019) எர்ணாகுளத்தில் இருந்து அதிகாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1.27 மணிக்கு தென்காசிக்கும் மாலை 3.43 மணிக்கு விருதுநகர் இரயில் நிலையமும் வந்தடைகிறது. இரவு 7 மணிக்கு காரைக்குடி சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு இரயில் (வண்டி எண் – 06020) காரைக்குடியில் இருந்து நள்ளிரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.58 மணிக்கு விருதுநகருக்கும், விடியற்காலை 3.50 மணிக்கு தென்காசிக்கும் செல்கிறது. மறுநாள் நண்பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் இரயில் நிலையம் சென்றடைகிறது.

Tags: trainSabarimalai
ShareTweetSendShare
Previous Post

15 உயிர்களை காப்பாற்றிய தேசிய பேரிடர் மீட்புக்குழு! – வானதி சீனிவாசன் பாராட்டு!

Next Post

செயல்படாத கணக்குகள் டிசம்பர் 1 முதல் நீக்கம்: கூகுள் அதிரடி தொடக்கம்!

Related News

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

பஞ்சாப் அணியால் அவமதிக்கப்பட்டேன் – கிறிஸ் கெயில்!

தெலங்கானா : விவசாயியின் தற்கொலையை கண்டுகொள்ளாமல் செல்போனை பார்த்த தாசில்தார்!

வைகை அணை – பாசன வசதிக்காக 100 அடி கூடுதலாக தண்ணீர் திறப்பு!

ராஜினாமா செய்தார் நேபாள பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies