வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை, தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.
அதன்படி, தென்காசிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஈரோடு தொகுதிக்கு, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், நாமக்கல் தொகுதிக்கு பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, காஞ்சிபுரத்திற்கு கே. டி.ராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென் சென்னைக்கு பாஸ்கர், மத்திய சென்னைக்கு ஜி.ராதாகிருஷ்ணன், வட சென்னைக்குப் பெப்சி சிவகுமார், ஸ்ரீபெரும்புத்தூருக்கு டால்பின் ஸ்ரீதர், சேலத்துக்குத் முன்னாள் எம்பி, கே.பி. ராமலிங்கமும், சிதம்பரத்திற்கு எஸ்.ஜி.சூர்யாவும் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வரும் டிசம்பர் மாதம் பாரதப் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில், தமிழக பா.ஜ.க. சார்பில் 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதால், நாடாளுமன்ற தேர்தல் பணி வேகம் எடுத்துள்ளது.